கற்பழித்தவர்கள் மீது புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை: விரக்தியில் இளம்பெண் தீக்குளிப்பு
போபால்: மத்தியபிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு எதிராக புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்ட காரணத்தால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குணா மாவட்டம், பஜ்ரங்கர் கிராமத்தை சேர்ந்த 16 வயது இளம்பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் சோனு செகாரியா (23), சோனு சென் (20) என்ற வாலிபர்கள் கடந்த 26-ம் தேதி பலாத்காரம் செய்தனர். இது பற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என அவர்கள் மிரட்டியும் உள்ளனர்.
எனினும் அதற்கு அஞ்சாமல் தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாருடன் சென்று பர்கோடாகிர்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் அதனை கண்டு கொள்ளவில்லை.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய அந்த இளம்பெண், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த காயமடைந்த அந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'இச்சம்பவத்தின் மூலம் கற்பழிப்பு குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய மத்திய பிரதேச மாநில அரசின் கோர முகம் மீண்டும் வெளிப்பட்டுள்ளது' என அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அஜய் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம்பெண்ணை நேற்று சந்தித்து ஆறுதல் கூறிய குவாலியர் சரக போலீஸ் ஐ.ஜி. ஆதர்ஷ் கடியார், குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதன் பின்பே நேற்று குணா மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கே.சி.ஜேயின், பஜ்ரங்கர் கிராமத்திற்கு சென்று குற்றவாளிகளில் ஒருவனை கைது செய்துள்ளார்.தலைமறைவாக உள்ள மற்றொரு குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications