எதிஹாட் ஏர்வேஸுடம் 24% பங்குகளை ரூ2,058 கோடிக்கு விற்க ஜெட் ஏர்வேஸ் நிர்வாகக் குழு ஒப்புதல்!
Subscribe to Oneindia Tamil

மும்பையில் நேற்று நடைபெற்ற ஜெட் ஏர்வேஸின் நிர்வாகிகள் கூட்டத்தில் 2.72 கோடி பங்குகளை விற்பனை செய்ய ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது. ஒரு பங்கின் மதிப்பு ரூ744.73 ஏன நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவு பங்கு சந்தைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் 49% அன்னிய நேரடி முதலீட்டுக்கு கடந்த ஆண்டு மத்திய அரசு அனுமதித்த பின்னர் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று முதல் முறையாக இந்தியாவில் தற்போதுதான் முதலீடு செய்கிறது.
கடந்த சில மாதங்களாக எதிஹாட் ஏர்வேஸுக்கும் ஜெட் ஏர்வேஸுக்கும் இடையே பங்கு விற்பனை தொடர்பாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மத்திய அமைச்சர்களையும் இரு நிறுவனங்களின் நிர்வாகிகளும் கலந்து ஆலோசித்திருந்தனர். இருப்பினும் பங்குகளை மாற்றுவது தொடர்பாக இழுபறி நீடித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications