அம்மா எப்போ தூக்கிக் கொஞ்சுவாங்கனு 2 மாத குட்டிப்பாப்பாவுக்கு தெரியுமாம்...
லண்டன்: இரண்டு மாத குழந்தைகளுக்கு அம்மா தன்னை எப்போது தூக்கிக் கொஞ்சுவார் என்பது நன்றாக தெரியும் என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் வாசு ரெட்டி, தனது ஆய்வின் முடிவில், பிறந்து இரண்டு முதல் நான்கு மாதங்களே ஆன இளம் சிறார்களுக்கு தன்னைச் சுற்றி நடப்பவைகளாஇப் புரிந்து கொள்ள இயலும் எனத் தெரிவித்துள்ளார்.
அதுவும் அம்மா அருகில் வருகிறார் என்றால், தன்னைத் தூக்கி கொஞ்சுவதற்கோ அல்லது உணவு கொடுப்பதற்கோ தான் வருகிறார் என்பது அந்த குட்டிகளுக்கு நன்றாகவே புரியுமாம். எனவே, அதற்குத் தக்கவாறு உடலை விரைப்பாக்கி, தோள்பட்டையைத் தூக்கி அம்மா தூக்குவதற்கு வசதியாக ரெடியாகி விடுமாம் பாப்பா.

குட்டிப்பாப்பா...
புதிதாக பிறந்த குழந்தைகளின் உடல் அசைவுகள், ஒத்துழைப்புகள் மற்றும் சமாளிப்புகள் பற்றி ஆய்வு செய்யப்படுவது இது தான் முதல் முறையாம்.

நல்ல சுதாரிப்பான குழந்தை...
ஆய்வின் முடிவுகளைப் பார்த்து ஆராய்ச்சியாளரே அசந்து விட்டாராம். பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகளுக்கு இத்தனை சுதாரிப்பு இருக்கும் என அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம்.

வளர்ப்பு முறையை மாற்ற வேண்டுமாம்....
ஆய்வின் முடிவுகளில் இருந்து தெரிய வந்திருக்கும் மற்றொரு விஷயம், நாம் குழந்தை வளர்ப்பு முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது என்பது என தெரிவித்துள்ளார் ர்ட்டி. ஏனென்றால், குழந்தைகளுக்கு இவ்வளவு குறுகிய மாதங்களில் தன்னைச் சுற்றி நடப்பது புரிகிறது என்றால், நாமும் அதற்குத் தகுந்த படி வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.

ஆட்டிசம் கண்டறியலாம்...
இந்த ஆய்வின் மூலம் ஆட்டிசம் போன்ற வளர்ச்சிக் குறைபாடு நோய்களை எளிதில் கண்டறியலாமாம். 1943ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றவர்கள் தங்களைத் தூக்குவதற்கு ஒத்துழைக்காது என நிரூபிக்கப்பட்டதை மேற்கோள் காட்டியுள்ளார் வாசு ரெட்டி.

அம்மா, இங்கே வா...வா...
பிறந்து மூன்று மாதங்களே ஆன 18 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வும், இரண்டு முதல் நான்கு மாதங்களான 10 குழந்தைகளை வைத்து ஒரு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. அனைத்ஹ்டுக் குழந்தைகளுமே பாயில் படுக்க வைக்கப்ப்ட்டிருந்தன. அவர்களின் அம்மாவை அருகில் வர வைத்து சோதனை செய்யப் பட்டது.

அம்மா சொல்லைத் தட்டாத குழந்தைகள்...
தாய்மார்கள் முதலில் குழந்தைகளுடன் பேச வைக்கப்பட்டார்கள். பின்னர், குழந்தைகளைத் தூக்க வைக்கப்பட்டார்கள். இதில் இரண்டு மாதங்களான குழந்தைகள் தங்களது தாயின் வசதிக்கேற்ப உடலை வளைத்துக் கொடுத்து தூக்குவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தனவாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications