சகோதரி பிணத்துடன் 5 நாட்கள் வாழ்ந்த பாசக்கார தங்கை… ம.பியில் பயங்கரம்
போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில் உயிரிழந்த அக்காவின் சடலத்துடன் 5 நாட்கள் உயிர்வாழ்ந்துள்ளார் பாசக்கார தங்கை. மரணத்தில் மர்மம் நீடிப்பதால் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பியுள்ளனர்.
போபால் நகரின் புது மார்க்கெட் பகுதியில் ராதா அகர்வால் (55), சரஸ்வதி (42) ஆகிய சகோதரிகள் அடுக்குமாடி வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் வாழ்க்கைக்கு தேவையான பணம் எங்கு? யாரிடம் இருந்து வருகிறது? என்பதும் புரியாத புதிராகவே இருந்து வந்தது.
ஆண் துணை ஏதுமின்றி தனிமையில் வசித்த இவர்கள் அக்கம்பக்கத்தினருடன் அதிகமாக தொடர்பு வைத்துக் கொள்வதை தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இவர்களின் வீட்டில் இருந்து தாங்க முடியாத துர்நாற்றம் வீசுவதை சகித்துக்கொள்ள முடியாத அந்த குடியிருப்புவாசிகள், போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த வீட்டின் கதவை திறந்து பார்த்தபோது உள்ள ராதா அகர்வால் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார்.
சகோதரியின் சடலத்தின் அருகே தன்நிலை மறந்த நிலையில் அமர்ந்திருந்த சரஸ்வதியை தேற்றிய போலீசார் பிரேதத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ராதா அகர்வால் 5 நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று கூறிய போலீசார், அவர் எப்படி இறந்தார் என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர்தான் இறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தனர். ராதா அகர்வாலின் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக அக்கம்பக்கத்தினர் கருதுவதால் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே எதையும் தெளிவாக கூற முடியும் என கூறியுள்ளனர். போலீசார் அளித்த தகவலையடுத்து இந்தூரில் இருந்து வந்த அவர்களின் சகோதரர் இறுதி யாத்திரைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டார்.
பூட்டிய அறைக்குள் சகோதரி சடலத்துடன் பெண் ஒருவர் 5 நாட்களாக தனிமையில் வசித்த சம்பவம் போபாலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications