ஐ.ஏ.எஸ். ஆபிசருங்க எங்களுக்கு வேண்டாம்: சமாஜ்வாதி கட்சி தடாலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அனைத்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் மத்திய அரசு திரும்ப அழைத்துக்கொள்ளட்டும் எங்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் யாரும் வேண்டாம் என்று சமாஜ்வாதி கட்டி காட்டமாக கூறியுள்ளது.

ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா நாக்பால் சஸ்பெண்ட் விவகாரத்தில், உத்தரபிரதேச அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதால் கடும் ஆத்திரமடைந்துள்ளது ஆளும் சமாஜ்வாதி கட்சி. இந்நிலையில் லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், துர்கா நாக்பால் இடைநீக்கம் செய்யப்பட்டதை நியாயப்படுத்தினார். ஒரு அதிகாரி தவறு செய்தால், அவர் தண்டிக்கப்படுவார். இப்படித்தான் ஒரு அரசாங்கம் செயல்படும் என்று அவர் மேலும் கூறினார்.

துர்கா சக்தி பணியிடை நீக்க விவகாரத்தில் துர்காவுக்கு நீதி கேட்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போர்க்கொடி உயர்த்தினர்.

இதனையடுத்து ஐஏஎஸ் அதிகாரி துர்கா சக்தி நக்பால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க மாநில அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது

மேலும் பிரதமர் மன்மோகன் சிங்கும்,"துர்கா சக்தி நக்பால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக மாநில அரசுடன் பேசி வருகிறோம். அது தொடர்பாக முழு விவரம் கோரப்பட்டுள்ளது" என்று டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அகிலேஷ் யாதவின் மாமனாரும், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பி.யுமான ராம்கோபல் யாதவ், " மத்திய அரசிடமிருந்து இவ்வாறு தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் வந்தால், அனைத்து ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள் என்று எங்களது முதலமைச்சர் அகிலேஷ் தலைமையிலான அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதும். எங்களுக்கு மாநில அதிகாரிகளே போதும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+