'டிப்பருக்கு' ஆதரவாக 'கன்டெய்னர்'களும் ஸ்டிரைக்- தூத்துக்குடி துறைமுகத்தில் பாதிப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் டாரஸ் டிப்பர் லாரிகளுக்கு ஆதரவாக கன்டெய்னர் லாரிகள் உட்பட அனைத்து லாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் துறைமுகத்தின் ஏற்றுமதி, இறக்குமதி பணிகள் பெரிதும் முடங்கியது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மூலமாக தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட், தனியார் மின் உற்பத்தி நிலையங்கள், ஸ்பிக் உள்ளிட்ட ஆலைகளுக்கு நிலக்கரி, சல்பேட் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு அந்நிறுவனங்களுக்கு லாரிகள் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக தூத்துக்குடியில் 600க்கும் மேற்பட்ட கனரக டாரஸ் டிப்பர் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி துறைமுகத்தின் உட்பகுதியில் இயக்கப்படும் டிப்பர் லாரிகளுக்கு நடை ஒன்றிற்கு ரூ.700 வாடகையாக வழங்கப்படுகிறது. அதே சமயத்தில் அந்த லாரிகளில் 40டன் வரை நிலக்கரி ஏற்றப்படுவதாகவும் அதனால் வாடகையை ரூ.700ல் இருந்து ரூ.1500ஆக அதிகரித்து தரவேண்டும் என்று வலியுறுத்தி டிப்பர் லாரி உரிமையாளர்கள் நேற்று முன்தினம் முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், டிப்பர் லாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக அனைத்து லாரி உரிமையாளர்களும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர். அதாவது, கப்பல் வந்த 30தினங்களுக்குள் வாடகையை ஷிப்பிங் நிறுவனங்கள் வழங்கிடவேண்டும், துறைமுகத்தின் உள்ளே சன்டிங் அடிக்கும் லாரிகளுக்கு எடை வாடகை வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அனைத்து லாரிகளும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் ஈடுபட்டுள்ளதால் துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஸ்டிரைக்கில் லாரி உரிமையாளர்களுடன் தனியார் தொழில் நிறுவனத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications