பில்லி, சூன்யம் வைக்கும் மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டு ஜெயில்! ம.பியில் அவசர சட்டம்
மும்பை: மாந்திரீகம், பில்லி, சூன்யங்களில் ஈடுபடும் மோசடி மந்திரவாதிகளுக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க மகாராஷ்டிர மாநிலத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
செய்வினை, மாந்திரீகம், பில்லி, சூன்யம் உள்ளிட்ட பல்வேறு மூட பழக்க வழக்கங்கள் இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய மோசடி பேர்வழிகளை நம்பி, பணம், பொருள் இழப்பது மட்டுமல்லாது பாலியல் ரீதியில் பலியாகும் பெண்களும் ஏராளம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போது அவசர சட்டம் ஒன்றின் மூலமாக இத்தகைய மந்திர, தந்திர வேலைகள் மற்றும் பில்லி, சூன்யங்களில் ஈடுபடுவோருக்கு, ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
நரேந்திர தபோல்கர்
புனே நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர், நரேந்திர தபோல்கர் 'மகாராஷ்டிரா அந்தஷ்ட்டிர நிர்மூலன் சமிதி' என்கிற அமைப்பின் மூலமாக நீண்டகாலமாகவே மூட பழக்க, வழக்கங்களை எதிர்த்து பிரசாரம் செய்து வந்தார். மோசடி பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு நெருக்கடி கொடுத்து வந்தார்.
சமூக ஆர்வலர் படுகொலை
68 வயது தபோல்கரின் பிரசாரங்கள் பலரையும் அச்சுறுத்தவே கடந்த ஆகஸ்ட் 20 அன்று அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டனர். தபோல்கர் கொலைக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் குதித்ததோடு... 'மாந்திரீகம் மற்றும் பில்லி, சூன்யத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்' என்றும், கோரிக்கை வைத்தனர்.
கொலைக் குற்றவாளிகள் இன்னமும் கைது செய்யப்படாத நிலையில் மூட நம்பிக்கைக்கு எதிராக சனிக்கிழமையன்று அவசர சட்டம் இயற்றியுள்ளது மராட்டிய மாநில அரசு.
உயிர்பலி கொடுத்த பின்னர்
ஒரு உயிர் பலிக்குப் பிறகாவது... 'மந்திர, தந்திர, பில்லி, சூன்ய வேலைகள் எல்லாம், மோசடி வேலைகள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறதே இந்த அரசு' என்று ஆறுதல் அடைந்துள்ளனர் மக்கள்.
தமிழ்நாட்டில்...
மகாராட்டிரா மட்டுமல்லாது நாடுமுழுவதும் பில்லி, சூனியம், செய்வினை செயல்பாடுகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் இது போன்ற செயல்பாடுகளை தடை செய்வதோடு கடுமையான தண்டனைகளை வழங்க வகை செய்யும் சட்டத்தை இயற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் சமூக ஆர்வலர்கள்.
-
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்! -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர்












Click it and Unblock the Notifications