அமைதி முக்கியம்! கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடையா? முதல்வர் பொம்மை கூறியது என்ன தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகத்தில் வக்பு வாரியத்துக்கு தடை விதிக்கப்படுகிறதா என்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பதிலளித்துள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த நிலையில் முதல்வராக பசவராஜ் பொம்மை செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகத்தில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஹிஜாப் தடை தொடர்பான பிரச்சனையை தொடர்ந்து இந்த பிரசாரங்களை இந்துத்துவ அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வக்பு வாரியத்துக்கு தடை
இதனால் கோவில்களில் முஸ்லிம்கள் கடை அமைக்க எதிர்ப்பு, ஹாலால் உணவு பிரச்சனைகள் எழுந்தன. மேலும் மசூதிகளில் ஒலிபெருக்கி பயன்படுத்தும் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் கர்நாடகத்தில் வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஸ்ரீராமசேனை அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறினார். இதற்கு சில அமைப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில், சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சம்பந்தம் இல்லை
இதுபற்றி முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது: வக்பு வாரியம் தொடர்பான பேச்சு குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை. நீங்கள் சொல்லி தான் நான் அறிந்து கொண்டிருக்கிறேன். மாநிலத்தில் அவரவர் சம்பிரதாயத்தின்படி, அவரவர் நடந்து கொள்கிறார்கள். அரசு எப்போதும் சட்டத்தின்படியே நடக்கும். வக்பு வாரியத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்யப்படும் விவகாரத்திற்கும், அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.

அனைவரும் சமம்
மாநிலத்தில் உள்ள அனைத்து மக்களும் அரசின் முன் சமமானவர்கள் தான். இதில் வேறுபாடு பார்ப்பது இல்லை. மாநிலத்தில் மக்கள் அமைதியாக வாழ வேண்டும். சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்க வேண்டும். இது மட்டுமே அரசின் நோக்கம். அதை நிறைவேற்றும் நோக்கத்தில் அரசு செயல்பட்டு வருகிறது.

காங்கிரசுக்கு பதில்
இந்த வேளையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவின் பிட்காயின் விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‛‛பிட்காயின் விவகாரம் குறித்து ஏற்கனவே நான் சட்டசபை கூட்டத்தொடரிலேயே பதில் அளித்து விட்டேன். பிட்காயின் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினருக்கு இருக்கும் தகவல், ஆதாரங்களை தாராளமாக வெளியிடலாம். எதை பேசினாலும் ஆதாரங்களை வெளியிட்டு அவர்கள் பேசட்டும். அரசியல் காரணங்களுக்காக பிட்காயின் குறித்து பேசுவதை அவர்கள் கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
தினமும் ரூ.100 கோடியை செலவு செய்யும் பெங்களூர் மாநகராட்சி! ஆனா பாருங்க.. ஒன்னும் மாறல! -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி












Click it and Unblock the Notifications