பெங்களூரிலிருந்து மைசூருக்கு.. காரில் இனி ஜஸ்ட் 75 நிமிஷம்தான்! ஆனால்.. டோல்கேட் ரேட் என்ன தெரியுமா?
பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி வரும் அக்டோபர் மாதம் முழுவதுமாக பயன்பாட்டுக்கு வரும் நிலையில் பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும். அதேநேரத்தில் கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணிப்பவர்கள் 2 இடங்களில் டோல் கட்டணமாக மொத்தம் 200 முதல் 250 ரூபாய் வரை செலுத்த வேண்டி இருக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரில் இருந்து மைசூருக்கு நான்கு வழிச்சாலை உள்ளது. இங்கு அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழிச்சாலையாக மாற்ற திட்டமிடப்பட்டது.
கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசும் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழித்தடமாக எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. இதில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

ரூ.8,350 கோடி செலவில்
இந்த திட்டத்துக்கு 2014ல் ரூ.4,100 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அதன்பிறகு திட்ட மதிப்பீடு இரட்டிப்பானது. அதன்படி ரூ.8350 கோடி செலவில் பெங்களூர்-மைசூர் 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணிகள் முழுவதுமாக 2022 அக்டோபருக்கு முன்பு முடிவடைய உள்ளது.

அக்டோபரில் முழு பயன்பாடு
இந்த நிலையில் பெங்களூரில் இருந்து மண்டியா மாவட்டம் மத்தூர் அருகே நிடகட்டா வரையிலான சாலை ஜூலை மாதம் பயன்பாட்டுக்கு வரும். நிடகட்டாவில் இருந்து மைசூர் வரையிலான நெடுஞ்சாலை அக்டோபரில் திறக்கப்படும். இதன்மூலம் 140 கிலோமீட்டர் தொலைவிலான பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை அக்டோபரில் முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.

2 சுங்கச்சாவடிகள்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வழிக்காட்டுதல் படி ஒவ்வொரு 60 கிலோமீட்டருக்கு சுங்கச்சாவடி வசூலிக்கப்பட வேண்டும். அதன்படி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணங்கள் மாறுபாடு அடைகின்றன. நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்கள், பாதைகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணங்கள் வேறுபாடு அடைகின்றன.
இந்நிலையில் தான் பெங்களூர்-மைசூர் இடையேயான எக்ஸ்பிரஸ் ரோட்டில் பெங்களூர் கும்பலகோடு மற்றும் மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டனா அருகே சுங்கச்சாவடிகள் அமைய உள்ளன. இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 9 பெரிய பாலங்கள், 44 சிறிய பாலங்கள், 4 ரயில்வே மேம்பாலங்கள் உள்ளன. இதனடிப்படையில் சுங்கக்கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

ரூ.200 முதல் ரூ.250
இதுபற்றி மைசூர்-குடகு எம்பி பிரதாப் சிம்ஹா கூறுகையில், ‛‛இந்த நெடுஞ்சாலையால் பெங்களூர்-மைசூர் இடையேயான பயணத்தை 75 நிமிடங்களில் மேற்கொள்ளலாம். இதன்மூலம் நேரம் மிச்சமாவதோடு மைசூரில் தொழில்துறை வளர்ச்சிக்கும் பயனளிக்கும். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையில் டோல் கட்டணம் ரூ.200 முதல் ரூ.250 வரை இருக்கும். இருப்பினும் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகே உண்மையான சுங்க கட்டணம் என்ன என்பது தெரியும்'' என்றார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications