ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூன் 30, 2019 வரை நீடிப்பு
ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2019 வரை தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
Recommended Video

டெல்லி: ஜிஎஸ்டி ஆண்டு கணக்கு, ஆடிட் அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூன் 30, 2019 வரை தாக்கல் செய்யலாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது. முதல் நிதி ஆண்டு முடிவடைந்த நிலையில் நிறுவனங்கள் தங்களுடைய ஆண்டு தாக்கலை வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும். 2 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருக்கும் நிறுவனங்கள் ஆண்டு வரித்தாக்கலுடன், ஆடிட் அறிக்கைகளும் தாக்கல் செய்ய வேண்டும்.

ஜிஎஸ்டிஆர்-9, ஜிஎஸ்டிஆர்-9ஏ மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி ஆகிய படிவங்களை தாக்கல் செய்ய வரும் 31 ஆம் தேதி கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்குமாறு அனைத்து இந்திய வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லியிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் அறிவித்தது. தேவையான படிவங்களை ஜிஎஸ்டி இணையதளம் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சனிக்கிழமை டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு 2019ஆம் ஆண்டு ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 முதல் புதிய ரிட்டன் படிவம் தாக்கல் செய்யலாம். ஜூலை 1 முதல் கண்டிப்பாக படிவம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications