உஷார்.. அடுத்த 3 மணிநேரம் கவனம்.. 18 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை - வானிலை மையம் "வார்னிங்"
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்றிருப்பதால் தமிழகத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யவிருப்பதால் மக்கள் அநாவசியமாக வெளியே நடமாட வேண்டாம் என சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன.

வெளுத்து வாங்கும் மழை..
இலங்கை அருகே வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதனால் நேற்று காலை முதலாகவே தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில், நேற்று மாலையில் இருந்து கனமழை கொட்டித் தீர்க்க தொடங்கியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் நேற்று இரவு முதல் இப்போது வரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆக மொத்தம், தமிழகத்தில் எந்தப் பக்கம் திரும்பினாலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

டெல்டா மாவட்டங்கள்
வட தமிழகத்தை போல டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. அளவுக்கு அதிகமாக மழை பெய்வதால் பல ஏக்கரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனிடையே, இந்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றும், நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3 மணிநேரம்..
இந்நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மையமாக வலுப்பெற்றிருப்பதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அடுத்த 3 மணிநேரத்திற்கு 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

18 மாவட்டங்கள் என்னென்ன?
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதேபோல, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications