பேசிட்டே ஆற்றில் விழுந்த 18 வயசு சுமித்ரா.. செல்போனில் காதலன்! பாலத்தில் தவித்த தோழி! இப்படியுமா?
சென்னை: இந்தியாவில் நாளுக்கு நாள் தற்கொலைகளும், கொலைகளும் அதிகமாகி கொண்டே வருகின்றன. முக்கியமாக, இளம் தலைமுறையினரின் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.. இந்த இளம் மரணங்களுக்கு பிரதான காரணமாக இருப்பது, அவர்களது புரிதல் குறைபாடுகள்தான் என்று மனநல மருத்துவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.. இதோ இன்று மதியம் ஒரு சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது.. இதுகுறித்த விசாரணையை போலீசார் முழு வீச்சில் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்திலும், வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய பகுதிகளில் பலத்த மழை பெய்தபடியே உள்ளது..

கொட்டும் பேய்மழை
கடந்த 29ம் தேதியும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.. வடகிழக்கு மாவட்டங்களில் பலத்த மழைக்கான எச்சரிக்கையும் முன்கூட்டியே விடுக்கப்பட்டிருந்தது.. அதேபோல, 30 மற்றும் 31ம் தேதி வரை இந்த கனமழை நீடிக்கும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்திருந்தது.வடமேற்குப் பகுதி மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் தற்போது நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியே இந்த மழைக்கான காரணம் என்கிறார்கள் வானிலை ஆய்வாளர்கள்.. தொடரும் கனமழைஇதனால், ஜார்க்கண்ட் முழுவதுமே, சமீப நாட்களாக பருவமழை தீவிரமாக காணப்பட்டது.. இதில், மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் ஜிங்க்பானியில் அதிகபட்சமாக 74.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது.இதனிடையே, 4 நாட்களுக்கு முன்பு, ஜார்க்கண்டின் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில், மழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்து, தூங்கி கொண்டிருந்த 6 வயது சிறுமியும் மண்ணில் புதைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணிவிட்டது.. கார்காய் மற்றும் சுபர்ன்ரேகா நதிகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்..
சுமித்ரா காதலன்
இப்படி சமீப நாட்களாகவே மழையின் பிடியில் ஜார்க்கண்ட் சிக்கி வரும்நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. ஜாம்ஷெட்பூரை சேர்ந்த 187 வயது பெண் சுமித்ரா பிரமானிக்.. இவர் அந்த பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் தீவிரமாக காதலித்து வருகிறார்.
இன்று மதியம், சுமித்ராவும், அவரது தோழியும் கர்காய் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது சுமித்ரா தன்னுடைய காதலனுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்..
மிரண்டுபோன தோழி
திடீரென காதலர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது.. இதனால் ஒருவரையொருவர் சரமாரியாக போனிலேயே திட்டிக் கொண்டார்கள்.. ஒருகட்டத்தில் ஆவேசமும் ஆத்திரமும் அடைந்த சுமித்ரா, காதலனுடன் வாக்குவாதம் செய்து கொண்டே, திடீரென பாலத்தின் தடுப்பு மீது ஏறி நின்று, ஆற்றுக்குள் குதித்துவிட்டார்.இதைப்பார்த்து பதறிப்போன தோழி அதிர்ச்சியடைந்து அலறி துடித்தார்.. யாராவது சுமித்ராவை காப்பாற்றுங்களேன் என்று கதறி அழுதார்...
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தந்தனர்.. போலீசாரும் மீட்புப் படையினருடன் விரைந்து வந்தனர்.. ஆற்றில் இறங்கி சுமித்ராவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்...
ஆனால், இதுவரை சுமித்ராவை கண்டுபிடிக்க முடியவில்லை.. பலத்த மழையும் அங்கு பெய்து வருவதால், தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படை வீரர்கள் சொல்கிறார்கள்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications