கோபம்.. அமைச்சர் காந்தியை ஒருமையில் திட்டிய 2 இளைஞர்கள்.. ஒரே பரபரப்பு.. .தட்டித்தூக்கிய போலீஸ்
சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருப்பவர் ஆர் காந்தி. இவரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒருமையில் 2 இளைஞர்கள் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார் சென்னையை சேர்ந்த 2 இளைஞர்களை அதிரடியாக கைது செய்துள்ளனர். அமைச்சரை ஏன் ஒருமையில் திட்டினர் என்பது பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.
ராணிப்பேட்டை சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஆர் காந்தி. இவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தி கடந்த 21ம் தேதி ராணிப்பேட்டையில் இருந்து சென்னை சென்றார். அங்கு பணிகளை முடித்துவிட்டு அவர் காரில் மீண்டும் சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அந்தமான் தீவுக்கு விடுதலைப் புலிகள் மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் ராமசாமி பெயரிட்ட பிரதமர் மோடி!
அமைச்சருக்கு வந்த அழைப்பு
சென்னை காவேரிபாக்கம் அருகே அவரது கார் சென்றது. அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் 2 பேர் பேசினர். அவர்கள் இருவரும் அமைச்சர் ஆர் காந்தியிடம் தரக்குறைவாக பேசியுள்ளனர். அதாவது ‛‛ராணிப்பேட்டையை சேர்ந்த சாமுவேல் என்பவர் தங்களது வங்கியில் இருந்து கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை திரும்ப செலுத்தவில்லை. இந்த கடனை பெற்று தர வேண்டும்'' எனக்கூறியுள்ளனர்.
ஒருமையில் பேச்சு
மேலும், அமைச்சர் ஆர் காந்தியை அவர்கள் இருவரும் ஒருமையில் பேசி திட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் ஆர் காந்தியின் உதவியாளர் ராஜசேகர், கடந்த 21ம் தேதி காவேரிபாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் தொடர்பு எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
இந்த விசாரணையில் அவர்கள் சென்னையில் இருப்பது தெரியவந்தது. மேலும் இருவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் தான் அமைச்சர் ஆர் காந்தியை ஒருமையில் பேசிய இரு இளைஞர்களையும் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பெயர்கள் என்ன?
விசாரணையில் அவர்கள் சென்னையை சேர்ந்த கோகுல் மற்றும் பாலாஜி என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அதன்பிறகு இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.