Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு! ஐ.நா.சபையின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த அரசு தீவிரம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபையால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதே அதற்கான முன்னேற்பாடுகளை தொடங்கிவிட்டது தமிழக அரசு.

சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் மக்கள் மத்தியில் விளம்பரம் மேற்கொள்வது தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

சிறுதானியங்களை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வருமானமும், வாழ்வாதாரமும் மேம்பட அதிகாரிகளுக்கு பல்வேறு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை இறையன்பு வழங்கியிருக்கிறார்.

ஐ.நா. சபை

ஐ.நா. சபை

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சிறு தானியங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மக்களிடையே மக்காச்சோளம் தவிர்த்து, இதர சிறுதானியங்கள் உற்பத்தியை உயர்த்தவும், பயன்பாட்டினை அதிகரிக்கவும் பல்வேறு வகையான விளம்பரப் பணிகளை மேற்கொள்வதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் நடைபெற்றது.

 சிறுதானியங்கள்

சிறுதானியங்கள்

இக்கூட்டத்தில், 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களுக்கு மாதாந்திர வாரியாக செயல்படுத்தப்பட வேண்டிய தொழில்நுட்பம் மற்றும் விளம்பரப் பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. தற்போது பொது மக்களிடையே அரிசி உணவு அதிகரித்து, சோளம், கம்பு, கேழ்வரகு, தினை, வரகு, சாமை, குதிரைவாலி போன்ற சிறுதானியங்கள் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டதால், சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது.

நேரடி கொள்முதல்

நேரடி கொள்முதல்

கூட்டுறவு துறை, சமூக நலத் துறை போன்ற துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் பொது விநியோகம், மதிய உணவு, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் போன்ற திட்டங்களுக்குத் தேவையான சிறுதானியங்களை தமிழக விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வதற்கும் துறை முயற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.

 வேளாண்மை பல்கலை

வேளாண்மை பல்கலை

சிறுதானியங்களில் ஆராய்ச்சி பணி என்பது குறைந்து வருவதை சுட்டிக் காட்டி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், சிறுதானிய ஆராய்ச்சியில், கூடுதல் கவனம் செலுத்தி, சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், தானியங்களின் சேமிப்புக் காலத்தினை கூட்டி மதிப்புக் கூட்டப்பட்ட சிறுதானியப் பொருட்களின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து அரசுக்கு உரிய பரிந்துரைகளை வழங்குமாறு தலைமைச் செயலாளர் அவர்கள் பல்கலைக் கழக விஞ்ஞானிகளை கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+