சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தடுத்து அதிர்ச்சி! விக்கிரவாண்டி கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி? 10 நாளில் 7 தற்கொலை முயற்சிகள்!

Google Oneindia Tamil News

சென்னை : கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் திருவள்ளூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்டத்திலும் கல்லூரி மாணவி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 7 தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவிக்கு நீதி கேட்டு சுமார் பத்து நாட்களாக நடந்த போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் உயர் நீதிமன்ற அறிவுரைப்படி மாணவியின் உடலை பெற்றுக் கொண்ட பெற்றோர் சொந்த கிராமத்தில் அடக்கம் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- அமைச்சர் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- அமைச்சர்

தற்கொலை

தற்கொலை

மாணவி மரணம் அடைந்த வழக்கு தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் அது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் கல்லூரி மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்று மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரி கிராமத்தில் அரசு நிதி உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் இன்று விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

கீழச்சேரியில் +2 மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக பள்ளியின் முன்பு போராட்டம் நடந்து வரும் நிலையில், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் அதிர்ச்சிக்கும் மேல் அதிர்ச்சியாக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் கல்லூரி மாணவி மாடியில் இருந்து விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ள பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

தீவிர விசாரணை

தீவிர விசாரணை

விக்கிரவாண்டி அருகே உள்ள சூர்யா கல்விக் குழும, பாராமெடிக்கல் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் வழக்கம்போல இன்றைக்கு கல்லூரிக்கு வந்த நிலையில் திடீரென கல்லூரியின் முதல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடியவரை மீட்ட கல்லூரி நிர்வாகத்தினர் அவரை சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் அதிர்ச்சி

பெற்றோர்கள் அதிர்ச்சி

இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் மட்டும் கல்வி நிறுவனங்களை எட்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி சின்னசேலம் மாணவி மரணம், சேலம், காஞ்சிபுரம், கடலூர் மாணவர்கள் தற்கொலை முயற்சி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை முயற்சி, காலையில் திருவள்ளூர் மாணவி தற்கொலை, தொடர்ந்து விழுப்புரம் மாணவி தற்கொலை என அடுத்தடுத்து தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

English summary
While the Tiruvallur student committed suicide before recovering from the shock of the Kallakurichi student suicide incident, a college student attempted suicide by jumping from the floor in Villupuram district as well. In the last 10 days alone, about 7 incidents of suicide and attempted suicide have taken place, shocking parents and educators.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X