இப்படியொரு திட்டம் தமிழ்நாட்டை தவிர எங்குமே இல்லை.. ஸ்டாலினை வியந்து பாராட்டிய ஆ ராசா
சென்னை: தமிழகத்தில் தற்போது தலைசிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பேருந்தில் மகளிருக்கு இலவச பயண திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என என சத்தியமங்கலத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா பேசினார்.
Recommended Video
ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் எதிர்க்கட்சிகளான அதிமுகவும், பாமகவும், உள்ளிட்ட எந்த கட்சியும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆட்சியை குறை சொல்ல முடியாது என்றும் ஆ ராசா கூறினார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளை துவங்கி வைத்ததோடு பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் மட்டுமே
புஞ்சை புளியம்பட்டியில் நடைபெற்ற கொரோனா நிவாரணப் பொருள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆ.ராசா பேசியதாவது:
தமிழகத்தில் தற்போது தலைசிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது. பேருந்தில் மகளிருக்கு இலவச பயண திட்டம் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.

அதிமுகவால் முடியாது
ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆன நிலையில் எதிர்க்கட்சிகளான அதிமுக, பாமக, உள்ளிட்ட எந்த கட்சியும் சட்டமன்றத்திற்கு உள்ளேயும் சரி, வெளியேயும் சரி ஆட்சியை குறை சொல்ல முடியாது.

ஸ்டாலின் முதலிடம்
இந்தியா டுடே என்ற ஆங்கில பத்திரிக்கை இந்தியாவிலேயே எந்த முதலமைச்சர் சிறப்பாக ஆட்சி செய்கிறார் என மதிப்பெண் போட்ட பட்டியலில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் முதலிடம் பிடித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என பெரியார் கனவு கண்டார். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என கலைஞர் சட்டம் கொண்டு வந்தார். அதற்கு ஏற்பட்ட தடை எல்லாம் விலக்கி இன்றைக்கு தாழ்த்தப்பட்டவர் பிற்படுத்தப்பட்டவர் என அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

நிதி நிலைமை
இந்தாண்டு போடப்பட்டு இருக்கிற பட்ஜெட் ஒரு குறை பட்ஜெட். ஏனென்றால் இதற்கு முந்தைய பட்ஜெட் எடப்பாடி அரசாங்கம் போட்டுவிட்டுச் சென்றது. இருக்கின்ற நிதி நிலைமையை கருத்தில் கொண்டு புதிய திட்டங்களை அறிவிப்பதில் சில சிரமங்கள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். நீலகிரி நாடாளுமன்றத் தொகுதிக்கு தேவைப்படும் அனைத்து வளர்ச்சி திட்டங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் பெற்றுத் தருவேன்" இவ்வாறு ஆ ராசா பேசினார்.












Click it and Unblock the Notifications