எனக்கு சாதியே வேண்டாம்.. பார்த்திபன் எடுத்த முடிவு! ஆனா இது மட்டும் போதாது!
சென்னை: இயக்குநரும், நடிகருமான ஆர்.பார்த்திபன், தனது சாதி குறித்து சமீபத்தில் பெருமையாக பேசியிருந்தார். இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தான் 'No caste, NO religion' சான்றிதழ் வாங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
நான் இந்த சாதிக்காரன் என்று பெருமையாக சொல்லிக்கொள்வதில், இன்னொரு சமூகத்தை நாம் நமக்கு கீழே உள்ளதாக கருதுகிறோம் என்கிற உண்மை இருக்கிறது. இப்படி இருக்கையில், பார்த்திபனின் பேச்சு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

சாதி சொருகல்
தெலுங்கு சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பார்த்திபன், தான் இந்த சமூகத்தை சேர்ந்தவன்தான் என்று பெருமையாக கூறியிருந்தார். அப்படியெனில் மற்ற சமூகங்கள் எல்லாம் இவருக்கு கீழே என்பதை தெரிவிக்க விரும்புகிறாரா? அல்லது, நான் இந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கோருகிறாரா? கலை என்பது அதன் தரத்தை வைத்துதான் ரசிக்க முடியும். அப்படி இருக்கையில் இடையில் இந்த சாதி சொருகல் எங்கிருந்து வந்தது? என்று கேள்வி எழுந்தது.
சரமாரி கேள்வி
மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகளாக பார்த்திபன் திரைத்துறையில் தன்னை இப்படித்தான் தக்க வைத்துக்கொண்டாரா? என்று கேள்வியும் எழுந்தது. அவர் நடித்த படங்கள், அவர் இயக்கிய படங்கள் எல்லாம், அவருடைய சாதியை காண்பித்துதான் அதற்கான வாய்ப்புகளை பெற்றாரா? என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். மட்டுமல்லாது, அவருடைய படைப்புகள் அனைத்தும் குறிப்பிட்ட சாதி மக்களுக்காகத்தான் இருக்கிறதா? என்றும் வீரியமாக கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பியிருந்தனர்.
No caste, NO religion
இதனால், பார்த்திபன் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், தான் 'No caste, NO religion' சான்றிதழ் வாங்க தீவிரமாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
சான்றிதழால் சாதி ஒழிந்துவிடுமா
உண்மையில் இந்த 'No caste, NO religion' சான்றிதழ் மூலமாக எல்லாம் சாதி ஒழிந்தவிடாது. சாதி என்பது பேப்பரில் இல்லை. அது மனதில்தான் இருக்கிறது. எனவே பார்த்திபன் இந்த சான்றிதழை வாங்கினாலும், சாதி இல்லை என்கிறபடி நடந்துக்கொள்ள வேண்டும் என்று பலரும் கூறுகின்றனர்.
குறிப்பாக, ப்ளூ சட்டை மாறன், "சான்றிதழ் வைத்திருந்தால் போதாது. அதை செயலில் காட்ட வேண்டும். சாதிப்பெருமை மற்றும் பெண்களை தவறாக பேசுவதும்.. பிறகு வருத்தம், மன்னிப்பு கேட்பதும் மக்களிடம் எடுபடாது" என்று கூறியிருக்கிறார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications