என்ன பெரிய சூப்பர் ஸ்டார்..சுப்ரீம் ஸ்டார் தெரியுமா? செய்தியாளரிடம் சூடான சரத்! அவருக்கு என்ன கோபமோ?
சென்னை : இன்று வாரிசு படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கடுமையாக கோபமடைந்துள்ளார் சரத்குமார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள வாரிசு மற்றும் துணிவு படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது.
படம் தொடர்பான அறிவிப்பு வெளியான நிலையில் இருந்தே இருதரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் நேரில் கூட மோதிக் கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்த நிலையில், படம் வெளியான பிறகு யார் படம் ஹிட் என மோதல் எகிறியுள்ளது.

வாரிசு - துணிவு
இரு படங்களுமே வெற்றி பெற்றுள்ளது.. இரண்டுமே நன்றாக உள்ளது என பொதுவான ரசிகர்கள் சொல்லி வந்தாலும் வழக்கம் போல விஜய் அஜித் ரசிகர்கள் மோதல் போக்கை கையாண்டு வருகின்றனர். விஜய் படத்தின் பாடல்கள் வெளியான போது அது யூட்யூப் மூலம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. அதே நேரத்தில் அந்த பாடல்களை அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர்.

நம்பர் ஒன்
இதை அடுத்து துணிவு படத்தின் பாடல்கள் வெளியான போதும் விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்ததோடு துணிவு படத்தின் டிரைலர் பீஸ்ட் படத்தின் டிரைலர் போல் இருப்பதாக கிண்டல் செய்து வருகின்றனர். ஆனால் இரு படங்களின் பாடல்களும் நன்றாகவே இருக்கிறது என்பது தான் உண்மை. இதற்கிடையே வாரிசு படத்தின் விழாவில் பேசிய அந்த படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் சூப்பர் ஸ்டார் என்று பற்ற வைத்தார். அதற்கு முன்னதாகவே நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் அவருக்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் எனக் கூறியதும் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்றவைத்தது.

சரத்குமார்
போதாக்குறைக்கு நடிகர் சரத்குமாரும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற வாரிசு படத்தில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சரத்குமார்,"சூரியவம்சம் பட விழாவில் பேசிய போதே எதிர்காலத்தில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என சொன்னேன். அது நிறைவேற்றிவிட்டது. இப்போது விஜய் தான் சூப்பர் ஸ்டார்" என கூறினார். இதையடுத்து ரஜினி ரசிகர்களும் மற்றும் பொதுவான ரசிகர்களும் சரத்குமாரை விமர்சிக்க தொடங்கினர்.

திடீர் கோபம்
மேலும் இது தொடர்பாக கடும் விமர்சனங்களையும் அவர் சந்திக்க நேர்ந்தது. இந்த நிலையில் இன்று வாரிசு படத்தின் சக்சஸ் பிரஸ்மீட்டில் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமாரிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போது விஜய்க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தீர்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த சரத்குமார்," என் மகனுக்கு நான் தான் சூப்பர் ஸ்டார்.. எனக்கு என் அப்பா தான் சூப்பர் ஸ்டார்..

சுப்ரீம் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் என்ற விஷயத்தை பெரிதுபடுத்தி உலகத்திலேயே இதுதான் பெரிய பிரச்சனை போல நீங்கள் ஆக்கிவிட்டீர்கள். நான் விஜயை சூப்பர் ஸ்டார் என்று தான் சொன்னேன் முதலமைச்சர் ஆவார் பிரதமர் ஆவார் என்று சொல்லவில்லை. சூப்பர் ஸ்டார் என்பது ஒரு டைட்டில் அவ்வளவுதான். நான் சுப்ரீம் ஸ்டார்.. சூப்பர் ஸ்டார் பெருசா சுப்ரீம் ஸ்டார் பெருசா?" என கடுமையாக பதில் அளித்து விட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
ஜாய் கிரிஸில்டா வக்கீலுடன் சீரியல் நடிகை செய்த சதி! நாஞ்சில் விஜயன் வெளியிட்ட ஆதாரம்.. வெளிவரும் ரகசியம் -
கரூர் வழக்கில் விஜய்க்கு புதிய சம்மன்.. இறுக்கும் சிபிஐ! 15 ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு -
பாஜகவின் வக்கிர அரசியல்.. விஜய் நிகழ்த்த போகும் அதிசயம்.. நாஞ்சில் சம்பத் அப்டேட் -
விஜய்யின் இமேஜ் உடைந்து விட்டது! பார்த்திபன் அப்படி பேசியதற்கு பின்னால் இருக்கும் காரணம்! பிரபலம் ஓபன் -
விஜய் என் நண்பர்.. திரிஷாவை பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! மிரட்டல் போன்! உடைத்து பேசிய பார்த்திபன் -
மௌன விரத மாஸ்டர் விஜய்! பெண்களுக்காக பேசுவாரு, திரிஷா பற்றி வாய் திறக்க மாட்டாரு! ப்ளூ சட்டை மாறன் நேரடி அட்டாக் -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
நேரில் வாங்க! கரூர் கேசில் விஜய்க்கு சிபிஐ சம்மன்! நாளை மீண்டும் விசாரணை! காட்டிக்கொடுத்த போன் கால் -
திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் போயிருக்கக் கூடாது! தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் கண்டனம் -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள்












Click it and Unblock the Notifications