கோவிலுக்கு பதிலாக.. சூடு ஏற்றிய சூரி! வரிந்து கட்டி வந்த அமைப்புகள்! இப்போ என்ன சொல்றார் தெரியுமா?
சென்னை : ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது நல்லது என விருமன் பட விழாவில் நடிகர் சூரி பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது எனவும் என்னுடைய பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் முத்தையாவும் நடிகர் கார்த்தியும் இணைந்து உருவாக்கியுள்ள விருமன் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் இயக்குனர் முத்தையா, நடிகர் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விருமன்
இந்த படத்தில் கார்த்தியுடன் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள், ராஜ் கிரண் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் சூர்யாவும் கலந்து கொண்ட நிலையில், நிகழ்ச்சி களைகட்டியது.

நடிகர் சூரி சர்ச்சை
பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூரி, நடிகர் சூர்யாவை மிகவும் புகழ்ந்து பேசினார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை குறித்து உணர்ச்சிப்பூர்வமாக குறிப்பிட்டார். அப்போது ஆயிரம் கோவில் கட்டுவதைவிட, அன்னசத்திரத்தை விட ஒரு மாணவனுக்கு கல்வி வழங்குவது சிறந்தது என பேசினார். அதற்கு சில இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. ஏற்கனவே சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா இதேபோல் பேசியது விவகாரமானது குறிப்பிடத்தக்கது.

பேச்சுக்கு விளக்கம்
இந்த நிலையில் தான் கோயிலுக்கு எதிரானவன் கிடையாது என நடிகர் சூரி விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் இன்று நடைபெற்ற விருமன் பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரி தான் மதுரையில் பேசிய பேச்சுக்கு கிளம்பிய சர்ச்சைகள் குறித்து விரிவான விளக்கம் ஒன்றை அளித்தார். அதில்,"நான் எந்த வேலை தொடங்கினாலும் மதுரை மீனாட்சி அம்மனை வைத்து தான் ஆரம்பிப்பேன். கடவுளுக்கு எதிரானவன் தான் கிடையாது.

எதிரானவன் கிடையாது
நான் நடத்தும் ஹோட்டல்களுக்கு அம்மன் என தான் பெயர் வைத்துள்ளேன். சிலர் நான் சொன்னதை தவறாக எடுத்து கொண்டனர். என்னுடைய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. நான் படிக்காதவன் அதனால் மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று தான் அதை சொன்னேன். நான் கோவிலுக்கு எதிரானவன் கிடையாது. அத்துடன் நான் படிக்காதவன் எனபதால் கல்வியின் முக்கியத்துவம் எனக்கு தெரியும் எனவும் தெரிவித்தேன்." என பேசினார்.
-
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள்












Click it and Unblock the Notifications