கம்யூனிஸ்டுகளுக்கு 25 கோடி.. விசாரணை கோரும் அதிமுக, தேமுதிக.. சிக்கலில் திமுக?
கூட்டணி கட்சிகளுக்கு பணம் தந்த விவகாரத்தில் திமுக விமர்சிக்கப்பட்டு வருகிறது
Recommended Video
சென்னை: ஏன் தான் கணக்கு காட்டினோமோ என்று நொந்து கொள்ளும் அளவுக்கு... திமுகவை அரசியல் கட்சிகள் வட்டமடித்து கேள்வி கேட்க தொடங்கி உள்ளனர். இது கம்யூனிஸ்ட்களுக்கும் தர்மசங்கடத்தை தந்துள்ளது!
2 கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட கூட்டணி கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் வழங்கியதாக, பிரமாண பத்திரத்தை திமுக தாக்கல் செய்திருந்தது. யாருக்கு எவ்வளவு ரூபாய் தரப்பட்டது என்ற விவரத்தை இதற்கு முன்பு இப்படி திமுக சொன்னதே இல்லை. இப்போது கட்சி பெயர்கள் + அவர்களுக்கு வழங்கிய தொகையை வெளிப்படையாக சொன்னது அனைத்து தரப்புக்கும் அதிர்ச்சிதான்!
இதற்கான விளக்கத்தை 2 கம்யூனிஸ்ட்களும் அறிக்கைகளாக தெளிவுபடுத்தினர். கூட்டணி கட்சிகளுக்குதான் அந்த பணத்தை செலவு செய்தோம் என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜகவின் எச்.ராஜாவோ, கம்யூனிஸ்ட்கள் அந்த பணத்தை என்ன செய்தார்கள், யாருக்கு எவ்வளவு செலவு செய்தார்கள் என்று தேர்தல் ஆணையம் நேரிடையாக கணக்கு கேட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

தேர்தல் நிதி
இதைதவிர, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விவகாரத்தை கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள். நேற்று பழனியில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, தேர்தல் நிதியாக திமுக ரூ.25 கோடி கொடுத்தது குறித்து அக்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

கருப்பு பணம்
இதில் ஒரு படி அமைச்சர் ஜெயக்குமார் மேலே சென்று, சிபிஐ விசாரணையே தேவை என்று சொல்லிவிட்டார். இவர் சொல்லும்போது, "ஜனநாயகத்தை நம்பி இருக்கிற இயக்கங்களுக்கு, திமுக பேரதிர்ச்சியை தந்துள்ளது. வெள்ளையில் இவ்வளவு வழங்கினால், கருப்பில் எவ்வளவு வழங்கி இருப்பர்? கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்.

பிரேமலதா
வேட்பாளர்கள் ஒவ்வொருவருக்கும், 20 கோடி ரூபாய் வரை, வழங்கி உள்ளனர். இதை, மத்திய அரசு எளிதில் விட்டு விடக்கூடாது. உண்மை நிலையை கண்டறிய, வேட்பாளர்களுக்கு எவ்வளவு கொடுத்தனர் என்பதை, விசாரிக்க வேண்டும். 1,000 கோடி ரூபாய் வரை விளையாடி உள்ளது. சிபிஐ. விசாரித்தால் நல்லது" என்றார்.

கடும் நெருக்கடி
பிரமாண பத்திரத்தையும் தாண்டி, கருப்பு, வெள்ளை என்ற ரீதியில் இந்த பணப்பட்டுவாடாவை அதிமுக விமர்சிக்க தொடங்கி உள்ளது, திமுகவுக்கு கடும் நெருக்கடியைதான் தரும். தேர்தல் ஆணையம் முதல் சிபிஐ வரை இந்த விவகாரம் கையாளப்பட்டால்,கூட்டணி கட்சிகளின் உறவு எந்த மாதிரியாக இருக்குமோ தெரியாது, ஆனால் அந்தந்த கட்சி தொண்டர்களின் மனநிலைமை சோர்வடைந்து உள்ளது.

சிக்கலில் திமுக?
பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய போய், இன்று ஆளாளுக்கு நிற்க வைத்து கேள்வி கேட்கும் நிலைமை திமுக வந்துள்ளது. இதை திமுக எப்படிஎதிர்கொள்ள போவதுடன், கூட்டணி கட்சிகளின் கறைகளையும் துடைத்தெறிய போகிறது என்பதை இனிதான் நாம் பார்க்க வேண்டி உள்ளது.
-
புதுசு புதுசா யாரை கூட்டிட்டு வந்தாலும் தமிழ்நாடு பாஜகவுக்கு அவுட் ஆப் கண்ட்ரோல்தான்.. ஸ்டாலின் -
அப்போ நான் கைக் குழந்தையா இருந்தப்போ.. இதே திருச்சியில் தான்! பழைய நினைவுகளை பகிர்ந்த ஸ்டாலின்! -
திருச்சி திமுக மாநில மாநாடு LIVE:உங்க அப்பனே வந்தாலும் நடக்காது! பாஜவுக்கு சவால் விட்ட ஸ்டாலின் -
காங்கிரஸை விட கூடுதல் தொகுதிகள் வேண்டும்.. அதிமுகவிடம் மல்லுக்கட்டும் பாஜக.. எவ்வளவு சீட் தெரியுமா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
பழைய ஓய்வூதிய திட்டம் என்னவானது? கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத திமுக அரசு! அன்புமணி கடும் விமர்சனம் -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி!












Click it and Unblock the Notifications