”எங்களுடன் சேர்ந்தால் 60-70 தொகுதிகள் வெல்லலாம்.. பிப். 14ம் தேதிக்குள் கூட்டணி முடிவு”- கிருஷ்ணசாமி
சென்னை: வரும் பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் கூட்டணி குறித்த முடிவை எட்டுவோம் என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். எங்களுடன் சேர்ந்தால் 60 தொகுதி முதல் 70 தொகுதிகள் வரை வெல்லலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி கடந்த தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என கிருஷ்ணசாமி தெரிவித்து வந்தார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, "மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தங்களுடைய வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலைநாட்டித் தர வேண்டும் எந்த காரணத்திற்காகவும் தங்களை வெளியேற்றக் கூடாது என்று சட்ட ரீதியாக போராடி வருகிறார்கள். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்து அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேசிய மனித உரிமை ஆணையமும் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே தமிழ்நாடு அரசுக்கும் தலைமைச் செயலாளருக்கும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தமிழக அரசு அதற்கு செவி சாய்க்காமல் மின்சாரம் போக்குவரத்து வசதிகள் ரேஷன் பொருட்களை எல்லாம் வழங்காத காரணத்தினால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொழிலாளர்கள் சார்பாக கொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த வாரத்தில் தொழிலாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் நெல்லை மாவட்ட ஆட்சியர் செய்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அதற்குரிய நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நேற்றைய தினம் மின்சாரம் முழுமையாக மாஞ்சோலையில் துண்டிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் ரேஷன் பொருட்கள் அனைத்து வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளது. மனித உரிமை மீறல்கள் நீதிமன்ற அவமதிப்பு ஆகும். நீதிமன்ற உத்தரவை மதிக்காத மாவட்ட நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் வந்தால் கூட எல்லா கிராமத்திலும் முறையாக குடிநீர் வசதிகள் கிடைப்பதில்லை.
தொடர்ந்து கூட்டணி பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 12 அல்லது 14ஆம் தேதிக்கு உள்ளாக கூட்டணி குறித்து முடிவெடுத்து விடுவோம். தமிழகத்தில் நல்ல அரசு அமைய வேண்டும். அதற்காக நாங்கள் முடிவு செய்வோம். ஆளுங்கட்சியில் இருக்கும் காங்கிரஸோ அல்லது மற்ற கட்சியும் இன்னும் நாங்கள் கூட்டணியில் இருப்போம் என்று கூறுகிறார்கள் தவிர சீட்டுகளை பற்றி இன்னும் பேசவில்லை. நாங்கள் பங்குபெற்றதும் மோசமான ஆட்சியையும் நல்லாட்சியாக மாற்றுவோம்.
அதிமுகவினர் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறார்கள். தமிழக வெற்றி கழகத்தினர் தங்களோடு கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வாருங்கள் எனவும் சொல்ல மாட்டேன் வரவேண்டாம் எனவும் கூற மாட்டேன். அனைவரும் ஓபனாக இருக்கின்றனர். கதவை திறந்து வைத்திருக்கிறோம். நல்ல முறையிலான காற்று வந்தால் திறந்து வைப்போம். மோசமான காற்று வந்தால் கதவை மூடிவிடுவோம். 60 தொகுதி முதல் 70 தொகுதிகள் வரை நாங்கள் பங்கேற்கும் கூட்டணிகள் வெற்றி பெறக்கூடிய அளவில் எங்களது வாக்கு வங்கி இருக்கிறது. தனித் தொகுதியை விட பொது தொகுதிகளில் எங்களுடைய வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
நான் பார்த்துக்கிறேன்.. எடப்பாடிக்கு போனை போட்ட டிடிவி தினகரன்.. போனை எடுக்கலையாமே.. ஏன்? -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர் -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு












Click it and Unblock the Notifications