விஜய் காபி மாதிரி.. பாஜக டீ மாதிரி.. இரண்டையும் ஒன்றாக கலக்க முடியாது.. அண்ணாமலை சொன்ன கருத்து!
சென்னை: என்னை பொறுத்தவரை டீ-யையும் காபியை ஒன்றாக கலக்க முடியாது.. அதுபோல் தவெக மற்றும் பாஜக கூட்டணி அமையாது என்று பாஜக நிர்வாகி அண்ணாமலை தெரிவித்துள்ளார். இரு கட்சிகளின் சித்தாந்தங்களும் வேறு கூறிய அண்ணாமலை, விஜய்யுடன் எந்தவித கூட்டணி பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில நாட்களாகவே என்டிஏ கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர பாஜக முயற்சிப்பதாக பேசப்பட்டு வருகிறது. அதிமுக தரப்பில் 50 தொகுதிகள் வரை கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாகவும், தேர்தலில் வென்றால் துணை முதல்வர் பதவி விஜய்க்கு அளிப்பதாகவும் பேச்சுவார்த்தை நட்பபதாக சொல்லப்படுகிறது.

அரசியல் ரீதியாகவும், சொந்த வாழ்க்கையிலும் விஜய் பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆட்சியில் பங்கு என்று விஜய் அறிவித்துள்ள போதும், இதுவரை எந்தக் கட்சியும் கூட்டணியில் இணைய தயாராக இல்லை. இதனால் என்டிஏ கூட்டணியில் இணைந்தால் தமிழ்நாட்டில் அமைப்பு ரீதியாக வளர முடியும் என்று விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து அண்ணாமலை பேசுகையில், விஜய்யை பொறுத்தவரை ஏற்கனவே சொல்லிவிட்டோம். விஜய்யுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக கூறிவிட்டார். டீயும், காபியும் கலக்காது என்று தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். ஏனென்றால் இரு கட்சிகளின் சித்தாந்தங்கள் வேறு..
என்டிஏ கூட்டணி வலிமையாக இருக்கிறது. தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து, திருச்சியில் நாளை பிரதமர் மோடி தலைமையில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. ஏற்கனவே மதுராந்தகம், மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் என்டிஏ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் கூட்டமாக அமையும்.
அதேபோல் வளைகுடா நாடுகளில் நடக்கும் போர் தொடர்பாக விவாதம் நடக்கும் என்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. அதனால் ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் தொடர்பாக நிச்சயமாக விவாதம் நடக்கும். அதேபோல் சிலிண்டரை பொறுத்தவரை பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. ஈரான் போரை தொடங்கிய பின் ஹார்முஸ் நீரணை வழிப்பாதையை மூடிவிட்டது.
இதனால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பெட்ரோலியம் பொருட்களை பல்வேறு நாடுகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டாலும், சிலிண்டர் எரிவாயு அதிகமாக சவுதியில் இருந்தே வருகிறது. ஹோட்டல்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் எந்த அரசியலும் இல்லை. அவர்கள் தொழில் பாதிக்கப்படுவதாக கூறுகிறார்கள். இது நிச்சயமாக அசாதாரணமான சூழல் தான்.
இப்போதைக்கு வீட்டு உபயோக சிலிண்டர் தங்கு தடையின்றி கிடைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். விரைவாக இது இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். 60% பெட்ரோலியம் பொருட்கள் இறக்குமதி செய்து வருகிறோம். அதனால் விரைவில் போர் சூழல் இயல்புக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலைக்கு புதிய ‘ரோல்'..தேர்தல் நெருங்கும் வேளையில் பாஜக கொடுத்த முக்கிய ‘அசைன்மென்ட்' -
திடீரென பாஜகவுக்கு ஓட்டு கேட்ட விஜய்.. ஷாக்கான தவெக வேட்பாளர்.. பாவம்யா அவரே ‘கன்ஃபியூஸ்' ஆகிட்டாரு! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
தவெகவுடன் பேசியதை சொல்லட்டுமா.. தினகரன் குறித்து புட்டு புட்டு வைத்த முன்னாள் எம்எல்ஏ -
ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்.. கூடுதல் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து கிரேட் எஸ்கேப்! -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய் பெரம்பூர் தொகுதிக்கான வேட்புமனுவில் தவறு செய்திருந்தாலும்! அவரது வேட்புமனு ரத்தாகாதாமே! ஏன்? -
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
Vijay Affidavit: குடும்பத்திற்கே கடன் கொடுத்த ஒருவரை பார்த்ததே இல்லை! விஜய் மீது முத்தரசன் தாக்கு! -
டைம் ட்ராவல் செய்த விஜய்? பெரம்பூர் மனுவில் 52 வயது.. திருச்சி வேட்புமனுவில் 51 வயது! வெரி ராங் ப்ரோ -
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து












Click it and Unblock the Notifications