மன அழுத்தம் இருந்தது.. கெட்ட கெட்ட வார்த்தையில் திட்டினாங்க.. கண்ணீர் விட்டு அழுத அறந்தாங்கி நிஷா
சென்னை: விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற அறந்தாங்கி நிஷா ஒரு விஷயத்தை கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஸ்டான்ட் அப் காமெடியன்களாக ஆண்களே ஜொலித்து வந்த போது அறந்தாங்கியிலிருந்து வந்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் நிஷா. இவர் பழனியுடன் இணைந்து செய்யும் காமெடிகள் ஜோராக இருக்கும்.
கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் நிஷா- பழனி, நிஷா- ராமர் ஜோடி வந்தாலே வயிறு குலுங்க சிரிப்பது கியாரண்டி. மேலும் அவ்வப்போது தாடி பாலாஜியுடன் இணைந்து காமெடி செய்வார்.

மனைவியுடன் வந்த மகேஷ்
உடனே பதறி அடித்து கொண்டு தனது மனைவியுடன் வந்த மகேஷ், நிஷாவுக்கும் அவரது குழந்தைக்கும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். மயக்கத்தில் இருந்த நிஷாவுக்கு மகேஷின் மனைவி ஆறுதலாக இருந்தார் என ஒவ்வொரு முறையும் நிஷா நெகிழ்ச்சியுடன் கூறுவார். இந்த நிலையில் பெண் பிரபலங்கள் மற்றும் அவர்களது கணவர்கள் இடையே நீயா நானாவில் விவாதம் நடைபெற்றது.

அறந்தாங்கி நிஷா
இந்த விவாதத்தில் அறந்தாங்கி நிஷா கணவருடன் கலந்து கொண்டார். அப்போது பிக்பாஸ் வாட்டுக்கு சென்று வந்த பிறகு மன ரீதியாக நிஷா பாதிக்கப்பட்டதாக நிஷா கணவர் தெரிவித்தார். ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் வரவே 20 நிமிடங்கள் ஆகும் அளவுக்கு இருந்தார். அவரை மருத்துவமனைக்கு கூட்டி சென்று சகஜ நிலைக்கு கொண்டு வரவே 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

கண்ணீர் விட்ட நிஷா
அது பற்றி பேசிய நிஷா எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்டினாங்க. இனி திட்டுவதற்கு புதிதாக வார்த்தைகளை கண்டுபிடிக்கும் அளவுக்கு திட்டினார்கள். பெண்களை மட்டும் திட்டும் போது உடலையும் நிறத்தையும் குறிப்பிட்டு திட்டினார்கள் என கூறிய நிஷா கண்ணீர் விட்டு அழுதார். அவரை அருகில் இருந்தவர்கள் தேற்றினார்கள்.

கடின உழைப்பாளி
மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர். இவருக்கு வாய்ப்பு வழங்கியது ஈரோடு மகேஷ் அண்ணன்தான் என பெருமை பொங்க சொல்வார். ஒரு முறை சென்னைக்கு நிகழ்ச்சிக்கு வரும் போது நிஷா வந்த வாகனம் விபத்து ஏற்பட்டது. குழந்தையின் காது கிழிந்து ரத்தம் கொட்டியது. சென்னையில் யாரையும் தெரியாததால் ஈரோடு மகேஷுக்கு போன் செய்தார்.












Click it and Unblock the Notifications