அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் 97% நிறைவு! தீயாய் நடக்கும் வேலை! துரைமுருகன் தனிக்கவனம்!
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் 97% நிறைவு பெற்றுள்ளதால் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த திட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

அத்திக்கடவு அவினாசி திட்டம்
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அதில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் ஏற்பட்டுள்ள தொய்வுகள் பற்றி அதிகாரிகளிடம் கேள்விக் கணைகளை வீசினார். இவர் இவ்வாறு கேட்பார் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்த உயர் அதிகாரிகள் கையில் விவரங்களோடு வந்திருந்தனர்.

97% பணிகள் நிறைவு
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகளில் தற்சமயம் சுமார் 97 சதவீதப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் குழாய் பதிக்கும் பணிகளில் மொத்தம் 1065 கி.மீட்டரில் சுமார் 1033 கி.மீ தூரத்திற்கு பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். மேலும், ஈரோடு மாவட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் காரணமாக பணிகளை விரைந்து முடிப்பதில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் காரணத்தை விளக்கினர். இருப்பினும், எதிர்வரும் டிசம்பர் 2022-க்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என உயர் அதிகாரிகள் அமைச்சர் துரைமுருகனிடம் உறுதியளித்தனர்.

ஜனவரி இறுதிக்குள்
அத்திக்கடவு அவினாசி திட்டப் பணிகள் முடிவடைந்தவுடன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு ஜனவரி மாத இறுதிக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உத்தேசித்துள்ளனர். ஆனால் மழைக்காலம் வருவதால் இந்தப் பணிகள் 2023 பிப்ரவரி மாதம் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சேலம் மாவட்டம், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டம் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் அதிகாரிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

சரபங்கா வடிநிலம்
அதற்கு பதிலளித்த அவர்கள், சரபங்கா வடிநிலத்திலுள்ள ஏரிகளுக்கு நீர் வழங்கும் திட்டத்தில் இதுவரை 87 சதவீதப் பணிகள் முடிவுற்றுள்ளதாகவும் மீதமுள்ள பணிகள் எதிர்வரும் 3 மாதங்களில் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை பொறுத்தவரை கொங்கு மண்டல மக்களின் நீண்ட கால கனவுத் திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
ராஜீவ்காந்தி பதவி போச்சு..லீக்கான இன்ஸ்டா சாட்! படக்கென பாயிண்டை பிடித்த பாஜக! பின்னணியில் அந்த தலை? -
கருணாநிதி வென்றது எப்படி? நெடுஞ்செழியன் வீழ்ந்தது எப்படி? சூழ்ச்சியா? முயற்சியா? -
மார்ச் 18க்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. காக்க வைக்கப்படும் திருமாவளவன்.. பின்னணி என்ன? -
Rajiv Gandhi: செந்தில் பாலாஜியிடமே முறைத்து கொண்ட ராஜீவ் காந்தி? பதவி மாற்றத்திற்கு இதுதான் காரணமா? -
10 மாவட்டத்தில் திமுகவுக்கு ரெட் சிக்னல்.. கொங்கு நிலவரத்தால் சோகத்தில் அறிவாலயம்.. ஸ்டாலின் முடிவு! -
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
2026 சட்டமன்றத் தேர்தல்: 'தொண்டை கட்டியிருக்கு...' - கனிமொழியின் அந்தப் பதில்! என்னதான் நடக்கிறது?












Click it and Unblock the Notifications