சென்னையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி
சென்னை: சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்,.
சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடு பட்டு இருந்த தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர் வேலுச்சாமி (27), சனிக்கிழமை இரவு 8 மணி அளவில் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

குண்டு துளைத்ததில் காவலர் வேலுச்சாமியின் கீழ்தாடை எலும்புகள் நொறுங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
எதற்காக அவர் இப்படி செய்தார் இதற்கான காரணம் என்ன என்று காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காவல்துறையில் அடிக்கடி தற்கொலை முயற்சிகள் நடப்பது தொடர்கதையாக உள்ளது.மன உளைச்சல் உள்பட பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.
அண்மையில் வேலூர் ஆயுதப்படையில் பணியாறும் அனிதா என்பவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அனிதாவின் கணவர் குபேந்திரன் என்பதும் வேலூர் அரிசி மண்டியில் சுமை தூக்கும் தொழிலாளியாக இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளை கவனித்துக்கொள்ள பணி மாற்றி தரும்படி உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். ஆனால் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் ஒரு பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றார். செங்கல்பட்டு திருப்போரூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஆவர். உயர் அதிகாரி திட்டியதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றார். நல்ல வேளையாக காப்பாற்றிவிட்டார்கள். தற்கொலை முயற்சிகள் மட்டுமின்றி தற்கொலைகளும் காவல்துறையில் அடிக்கடி நடக்கிறது. அடிக்கடி உளவியல் ரீதியான ஆலோசனைகளை போலீசாருக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
IPS Transfer: உளவுத்துறை டிஜிபியாக பாலநாகதேவி நியமனம்.. 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு! -
விருதுநகரில் உல்லாசமாக இருந்த பெண்ணிடமே ரூ.80 லட்சம்.. சமார்த்திய போலீஸ் ஏட்டுக்கு ட்விஸ்ட் -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
தமிழ்நாடு புதிய டிஜிபி நியமனம் எப்போது? மார்ச் 20-ல் யுபிஎஸ்சி கூட்டம் - உச்ச நீதிமன்றத்தில் தகவல்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல்











Click it and Unblock the Notifications