இதை கட்டாயம் கடைபிடியுங்கள்…மழைக்கால நோய்கள் வரவே வராது…மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்
சென்னை மாநகராட்சி பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறையின் மழைக் காலங்களில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகளை கடைபிடித்து மழைக்கால நோய்களை தவிர்க்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி சென்னை மக்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளார்.

*மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு போன்ற நோய்கள் வராமல் தடுக்க குடிநீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கவும்.
* உணவு உட்கொள்ளும் முன்பு, கழிவறையை பயன்படுத்திய பின்பு சோப்பு உபயோகப்படுத்தி முறையாக 20 நொடிகள் கைகளை நன்கு தேய்த்துக் கழுவவும்.
* வீட்டுக்கு வெளியில் செல்லும்போது காலணிகளை அணிந்து செல்லவும்.
* வீட்டிற்கு வெளியில் சென்று வந்த ஒவ்வொரு முறையும் கை கால்களை சோப்பு தேய்த்து கழுவவும்.
* சென்னை குடிநீர் வாரியம் குடிநீர் வழங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அடி பம்புகளில் தேங்கிய நீரை குடிநீராக பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
* சாலையோரங்களில் விற்கப்படும் ஈ மொய்த்த மற்றும் தூசு படிந்த உணவுப் பண்டங்களை உண்பதை தவிர்க்கவும்.
* சமைத்த உணவினை சூடான நிலையிலேயே சாப்பிடவும் பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
* திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதை தவிர்த்து பொதுக் கழிப்பறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள மருத்துவரிடம் முறையான சிகிச்சைப் பெற வேண்டும், சுய சிகிச்சை செய்யக் கூடாது.
* வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி பேதி ஏற்பட்டால் உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் வீட்டில் உள்ள நீர் ஆகாரங்களை அடிக்கடி பருகவும் உடன் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவும்.
* தங்கள் வீட்டில் உள்ள மேல்நிலை, கீழ்நிலை தொட்டிகளை வாரம் ஒருமுறை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்து கொண்டு நன்கு தேய்த்து கழுவி உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.
* வீட்டின் திறந்த மேல் நிலம் மற்றும் வீட்டை சுற்றி மழை நீர் தேங்க வாய்ப்புள்ள அனைத்து தேவையற்ற பொருட்களை அகற்றி கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்கவும் சுகாதாரத்தை காக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க உதவும்.
* புகார் மற்றும் கூடுதல் தகவல்களுக்கு 1913 அவசர மற்றும் சிகிச்சைக்கு மாநகராட்சி தொற்று நோய் மருத்துவமனை தண்டையார்பேட்டை 044-25912686/87/88 மற்றும் 108 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications