தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு.. ஆனாலும் வங்கிகள் இயங்கும்.. பணி நேரம் என்ன தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை வங்கிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 400-க்கும் மேற்பட்ட உயிரிழப்புளும் பதிவாகி வருகின்றன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை அடுத்தடுத்து மேற்கொண்டு வருகிறது.

மதிக்காத மக்கள்
கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மே 10 முதல் 24 வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. ஆனால் மக்கள் சிலர் தேவையில்லாமல் வெளியே சுற்றி ஊரடங்கை மதிக்காமல் இருந்து வந்தனர்.

முழு ஊரடங்கு
இதனை தொடர்ந்து வைரஸின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் 31-ம் தேதி வரை தமிழகத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணிகளை தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கிகள் இயங்கும்
பால் பூத், மருந்தகம் தவிர காய்கறி, மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . அலுவலங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள் கொண்டு இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

2 மணி வரை இயங்கும்
தமிழக அரசின் அனுமதியை தொடந்து தமிழகத்தில் நாளை முதல் வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை செயல்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அரசு உத்தரவின்படி மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களே பணியில் இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. வங்கி ஊழியர்களும், வங்கிக்கு வருபவர்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications