Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பள்ளிகளை திறந்ததால் பஸ்களில் பிதுங்கி வழியும் கூட்டம்.. காற்றில் பறந்த தனிமனித இடைவெளி, விதிமுறைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவதால் காலை முதல் பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. தனிநபர் இடைவெளி இல்லாமல் மக்கள் பயணம் செய்வதால் கொரோனா நோய் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    School Reopen | 9 முதல் 12ம் வகுப்பு வரை | உற்சாகத்தோடு வந்த மாணவ, மாணவிகள் | Oneindia Tamil

    செப்டம்பர் 1ம் தேதியான இன்று முதல், தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது.

    இதையடுத்து காலை 9 மணிமுதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன, கல்லூரிகளில் திறக்கப்பட்டுள்ளன.

    முதல் நாள்

    முதல் நாள்

    முதல் நாள் என்பதால் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப கணிசமான பெற்றோர் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் கூட ஓரளவுக்கு மாணவ-மாணவிகள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதை பார்க்க முடிகிறது. அப்படியிருந்துமே கூட்டம் அலை மோதுகிறது பஸ்களில்.

    பெண்கள் கூட்டம் அதிகம்

    பெண்கள் கூட்டம் அதிகம்

    பெண்களுக்கு டவுன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்வதற்கு தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதன் பிறகு பஸ்களில் பெண்களின் கூட்டம் சற்று அதிகரித்து காணப்பட்டது. தற்போது மாணவ மாணவிகளும் பஸ்களில் பயணம் செய்ய வேண்டி இருப்பதால் பெரும்பாலான பஸ்கள் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணம் செய்கின்றன.

    நின்றபடி பயணிக்கும் மாணவ, மாணவிகள்

    நின்றபடி பயணிக்கும் மாணவ, மாணவிகள்

    இருக்கைகள் நிரம்பி மாணவ மாணவிகள் நின்று கொண்டே பயணம் செய்வதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. பள்ளிகளில் என்னதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் கூட, பஸ்களில் இப்படி பலருடன் அருகே நின்று பயணம் செய்வது நோய் பரவல் ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் பெற்றோரிடையே எழுந்துள்ளது.

    கல்லூரி மாணவர்கள்

    கல்லூரி மாணவர்கள்

    கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களில் கணிசமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். பள்ளி மாணவர்கள் 18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்பதால் அவர்கள் தடுப்பூசி செலுத்தி இருக்க மாட்டார்கள். எனவே வெளியிடங்களில் இதுபோல சமூக இடைவெளி இல்லாமல் பழகிவிட்டு அவர்களுக்கு நோய் பரவல் ஏற்பட்டால் அது அவர்களை மட்டுமல்லாது குடும்பத்திலுள்ள பெரியவர்களுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    தீர்வு என்ன

    தீர்வு என்ன

    இதற்கு தீர்வாக, அதிகப்படியான பேருந்துகளை இயக்க வேண்டும் சமூக இடைவெளி இல்லாமல் பயணம் செய்வதை தடுக்க அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பெற்றோர்கள் கோரிக்கையாக இருக்கிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+