#31YearsofInjustice .. தொடங்கியது பிரச்சாரம்.. பேரறிவாளன் விடுதலை எப்போது? பரபரக்கும் ட்விட்டர்
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு ஒரு சின்ன விசாரணை தொடர்பாக பேரறிவாளனை கூட்டி சென்று இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அதாவது 31வது வருடம் தொடங்கி விட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி ட்விட்டரில் பிரச்சாரம் நடக்கிறது.
இந்த விவாதத்தில் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரும் பங்கேற்றார்கள். தொடர்ந்து பிரச்சாரம் நடந்து வருகிறது. பலரும் பேரறிவாளனின் விடுதலையை வலியுறுத்தி ட்விட்டரில் பேசி வருகிறார்கள்.
அற்புதம்மாள் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ஒரு சின்ன விசாரணை என்று தொடர்பாக பேரறிவாளனை கூட்டி சென்று இன்றுடன் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. 30 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார் பேரறிவாளன். 19 வயதில் அழைத்துச்செல்லப்பட்ட பேரறிவாளன் தொடர்ந்து 30 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார். மரண தண்டனை கைதியாகவும் இருந்துள்ளார். இது எல்லோருக்கும் தெரியும்.

தவறான வாக்குமூலம்
இந்த வழக்கில் தீர்ப்பு வந்த போது நான் சொன்னேன். என் பையனுக்கும் , இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் சிக்க வைத்துள்ளனர். ஆனால் யாரும் நம்பவில்லை. ஆனால் பின்னாளில் பேரறிவாளனிடம் வாக்குமூலம் வாங்கிய அதிகாரி தியாகராஜன் கூறுகையில், நான் பேரறிவாளனிடம் வாங்கிய வாக்குமூலத்தை அப்படியே பதிவு செய்திருந்தால் இன்றைக்கு இந்த தண்டனையே இல்லை. அவருக்கும் ராஜீவ் காந்தி கொலைக்கும் சம்பந்தம் இல்லை. அவர் சொன்னதுடன் இல்லாமல், உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

நிம்மதி இல்லை
சரி எல்லாம் வெளியாகிவிட்டது. என் மகன் விடுதலையாகிவிடுவான் என்று நம்பினேன். ஆனால் 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டு சிறை வாழ்க்கை பேரறிவாளனுக்கு பல விதமான நோய்களை கொடுத்துள்ளது. அதற்கான தொடர் மருத்துவம் அவனுக்கு கிடைக்கவில்லை. சில சமயங்களில் கிடைக்கிறது. ஆனால் தொடர்ந்து கிடைக்கவில்லை. சிறை வாழ்க்கையால் என் மகனின் நிம்மதி சந்தோஷம் எல்லாமே போய்விட்டது எங்கள் குடும்பத்தின் நிம்மதியும் போய்விட்டது" என்று வேதனை தெரிவித்தார்.

ட்விட்டர் பதிவு
அற்புதம்மாள் தனது ட்விட்டர் பதிவில், "தொடர் ஓட்டம்,வரலாற்றில் இல்லா போராட்டம், என பலரும் எனை சுட்டி பேசும்போது, மூப்படைந்த என் ரத்த ஓட்டமும் தேய்ந்துபோன என் எலும்புகளும் உயிர்வலியுடன் வேகமெடுக்கும். இப்போராட்டத்தின் முடிவு நீதியின் வெற்றியாகவேண்டும் என ஒற்றை இலக்கே காரணம்" என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகை
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விசாரணை என்ற பெயரில் பேரறிவாளன் அழைத்துச் செல்லப்பட்டு இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்குத் தொடர்பு இல்லை என்று விசாரணை அதிகாரிகள் முதல் நீதிபதிகள் வரை அறிவித்தும் அவரை விடுதலை செய்யும் விஷயத்தில் ஆளுநர் மாளிகை தொடர்ந்து கண்ணாமூச்சி ஆடுவது கண்டிக்கத்தக்கது.

7 தமிழர்கள்
7 தமிழர்களை விடுதலை செய்யும் அதிகாரம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தமிழக ஆளுநருக்கு உண்டு என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 07.09.2018 அன்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தீர்ப்பளித்துவிட்ட நிலையில், நாம் தொடர்ந்து தட்ட வேண்டியது சென்னையிலுள்ள ஆளுநர் மாளிகையின் கதவுகளைத்தானே தவிர, டெல்லி குடியரசு மாளிகையின் கதவுகளை அல்ல" என்று கூறியுள்ளார்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications