சென்னையில் திருமணமான எட்டு மாதத்தில் உயிரைவிட்ட ஸ்னேகா! வரதட்சணை கொடுமையால் துயரம்
சென்னை : தாம்பரத்தில் திருமணம் ஆகி எட்டே மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு வரதட்சணை கொடுமை தான் காரணம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னை தாம்பரம் அடுத்த கிழக்கு தாம்பரம், ரங்கநாதன் தெருவை சேர்ந்தவர் ஸ்னேகா(19), இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பனையூரை சேர்ந்த பிரமோத்(25) என்பவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆரம்பம் முதலே மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு கொடுமை தாங்காமல் ஸ்னேகா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார்.

வெளியே வரவில்லை
ஆனால் ஸ்னேகாவிடம் தொடர்ந்து செல்போனில் தொடர்பு கொண்டு பிரமோத் சண்டையிட்டாதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்னேகா வீட்டு அறையில் உறங்க சென்றவர் வெளியில் வரவில்லை.

ஸ்னேகா தற்கொலை
இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் தொங்கியவாறு இருந்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்து கதற அழுத்த பெற்றோர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

சேலையூர் போலீஸ்
தகவலறிந்து வந்த சேலையூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து ஸ்னேகாவின் பெற்றோர் சேலையூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

கோட்டாட்சியர் விசாரணை
திருமணம் ஆகி 8 மாதங்களே ஆகியுள்ளதால் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. திருமணம் ஆகி எட்டே மாதத்தில் எங்கள் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வரதட்சணை கொடுமை தான் காரணம் என பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications