ஜிபிஎஸ்-ஐ ஆஃப் செய்துவிட்டு.. ரூட்டை மாற்றி ஓட்டிய கில்லாடி டிரைவர்கள்.. தூக்கிய சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளை ரயில் நிலையத்துடன் இணைக்கும் வகையில் இணைப்பு பேருந்து வசதி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்பட்டது.
இவ்வாறு இருக்கையில், கடந்த சில வாரங்களாக விமான நிலைய மெட்ரோ நிறுத்தத்திலிருந்து மேற்கு தாம்பரம் வரை இந்த இணைப்பு பேருந்துகள் சில வழிகளை புறக்கணிக்கப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த புகார்களையடுத்து போக்குவரத்து ஊழியர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜிபிஎஸ்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் காரணத்தால் பொது போக்குவரத்தில் பயணிப்பவர்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சிரமத்தை போக்க, பேருந்துகள் தற்போது எங்கு இருக்கின்றன என்பதை கண்டறிய அரசு பேருந்துகளில் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டது. இதன் மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான பேருந்துகள் எவ்வளவு தொலைவில் இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தடம் புறக்கணிப்பு
இந்த அறிவிப்பு வெளியான நிலையில், பேருந்தின் லைவ் லொகேஷனை காட்டும் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 3 மாதங்களில் இந்த செயலியை சுமார் 1 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்தனர். ஆனால் சில இடங்களில் ஓட்டுநர்கள் ஜிபிஎஸ் கருவியை ஆஃப் செய்து வைத்துவிடுகிறார்கள் என்று புகார்கள் எழுந்தன. குறிப்பாக தாம்பரம் மேற்கிலிருந்து விமான நிலையம் வரை வரும் S100 எனும் இணைப்பு பேருந்தில் இதுபோன்று ஓட்டுநர்கள் அடிக்கடி ஜிபிஎஸ் கருவியை அனைத்து வைத்துவிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஏமாற்றம்
இதன் காரணமாக தாங்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக சிட்லபாக்கம் மக்கள் கூறுகின்றனர். அதாவது சிட்லபாக்கம், அஸ்தினாபுரம் வழியாக வருவதை இந்த பேருந்துகள் தவிர்க்கின்றன. இதற்காகவே ஓட்டுநர்கள் ஜிபிஸ் கருவியை ஆஃப் செய்து வைத்து விடுகிறார்கள் என்றும் பயணிகள் புகார் கூறியுள்ளனர். இதன் காரணமாக வேலைக்கு செல்லும் பெண்கள் நீண்ட நேரமாக பேருந்துக்கு காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளதாகவும் எனவே ஜிபிஎஸ் கருவியை ஆன் செய்து வைக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர்.

எச்சரிக்கை
இது குறித்து புகார்கள் குவிந்த நிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் போக்குவரத்து கழகத்திற்கு இந்த புகார்களை கொண்டு சென்றுள்ளது. புகாரை விசாரித்த போக்குவரத்துக்கழகம், இனி ஜிபிஎஸ்-ஐ ஆஃப் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications