உத்தரவு போயிருக்கு.. மீறும் கான்டிராக்டர்கள் மீது நடவடிக்கை பாயும் - சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை!
சென்னை : சரிவர பணியாற்றாத மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்கள் மீது அதிரடி நடவடிக்கை பாயும் என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்றும் மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில்லை. அவரவர் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், பிறரது பாதுகாப்புக்காக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என மேயர் பிரியா அறிவுறுத்தியுள்ளார்.

மேயர் பிரியா
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் வேலை வாய்ப்பு முகாமை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் இன்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா ராஜன், "தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையிலும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

மாஸ்க் கட்டாயம்
சென்னையில் 99 சதவீதம் பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 87% பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் பொது இடத்துக்கு செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும். சென்னையின் ஒரு சில இடங்களில் பொதுமக்கள் மாஸ்க் அணிவதில்லை. அவரவர் பாதுகாப்புக்காக மட்டுமல்லாமல், பிறரது பாதுகாப்புக்காக கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்" எனத் தெரிவித்தார்.

மழைநீர் வடிகால் பணிகள்
தொடர்ந்து பேசிய சென்னை மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சியில் 1,300 கிலோ மீட்டருக்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் தற்போது வரை மொத்தமாக 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. செப்டம்பர் மாதத்திற்குள் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை 100 சதவீதம் முடிக்க உத்தரவிட்டுள்ளோம்.

நடவடிக்கை பாயும்
மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகளை சரியாகச் செய்யாவிட்டால் அதை மீண்டும் சரி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சரியாகப் பணியாற்றாத மழைநீர் வடிகால் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications