சேகர்பாபு vs TVK அசோக்.. நேருக்கு நேர்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட வேட்பாளர்கள்.. துறைமுகத்தில் ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: துறைமுகம் தொகுதியில் திமுகவின் வேட்பாளரும் மூத்த அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டி உள்ளது. 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவு பெற்ற டோக்கன் பெற்றவர்கள் மட்டும் வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் தலைநகர் சென்னையின் இதயப் பகுதியான துறைமுகம் தொகுதியில் இன்று மாலை பெரும் பதற்றம் ஏற்பட்டது. திமுகவின் மூத்த நிர்வாகியும் அமைச்சருமான பி.கே. சேகர்பாபு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சினோரா அசோக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Clash in Harbour Constituency DMK s Sekar Babu and TVK s Sinora Ashok Face Off Over Booth Capturing Allegations

வாக்குவாதத்தின் பின்னணி

துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட ஒரு குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் இன்று மாலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, திமுக வேட்பாளர் சேகர்பாபு தனது ஆதரவாளர்களுடன் அந்தப் பகுதிக்கு வருகை தந்துள்ளார். அதே நேரத்தில், தவெக வேட்பாளர் சினோரா அசோக்கும் தனது தொண்டர்களுடன் அங்கு ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இருவரும் ஓரிடத்தில் சந்தித்தபோது, திடீரென வாக்குவாதம் வெடித்தது. சினோரா அசோக், சேகர்பாபுவை நோக்கிச் சில கேள்விகளை எழுப்ப, அதற்கு திமுக தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆரம்பத்தில் சாதாரணமாகத் தொடங்கிய இந்தப் பேச்சுவார்த்தை, நிமிடங்களில் ஆக்ரோஷமான வாக்குவாதமாக உருவெடுத்தது.

பூத் கேப்சர் புகார்

இந்த மோதலின்போது பேசிய தவெக வேட்பாளர் சினோரா அசோக், சேகர்பாபு மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "அமைச்சர் சேகர்பாபு தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்த வாக்குச்சாவடியைக் கைப்பற்ற (Booth Capture) முயற்சி செய்கிறார். வாக்காளர்களை அச்சுறுத்தி, ஜனநாயகத்திற்குப் புறம்பாகச் செயல்படுகிறார். இதனைத் தட்டிக்கேட்ட எங்களை திமுகவினர் தாக்க முயல்கின்றனர்," என்று அவர் சரமாரியாகக் குற்றம் சாட்டினார்.

சினோரா அசோக்கின் இந்தக் குற்றச்சாட்டு திமுக தொண்டர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியது. "அமைச்சர் வழக்கமான ஆய்வுக்குத்தான் வந்தார், தோல்வி பயத்தில் தவெக வேட்பாளர் வீண் பழி சுமத்துகிறார்" என திமுகவினர் எதிர் முழக்கமிட்டனர்.

நேருக்கு நேர் மோதல் - கைகலப்பு

இரு தரப்புக்கும் இடையிலான வாக்குவாதம் முற்றிய நிலையில், ஒருகட்டத்தில் கட்டுக்கடங்காத நிலை ஏற்பட்டது. சேகர்பாபு மற்றும் சினோரா அசோக் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றும், மோதல் தீவிரமடைந்து இரு வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவானது.

இதில் இரு தரப்பினருக்கும் இடையே லேசான கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வாக்குச்சாவடியில் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

காவல்துறை நடவடிக்கை

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுதல் காவல்துறையினர், பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். இரு வேட்பாளர்களையும் தனித்தனியே அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தற்போது அந்தப் பகுதியில் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

துறைமுகம் தொகுதியில் ஏற்கனவே போட்டி கடுமையாக இருந்த நிலையில், இன்று நடந்த இந்தத் தாக்குதல் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தவெக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கத் தயாராகி வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+