நரிக்குறவர் இன வீட்டில்... பாசி மணியை அணிந்து கொண்டு காபி, இட்லி சாப்பிட்ட முதல்வர்
நரிக்குறவர் இன மாணவி வீட்டில் முதல்வர் மு.க ஸ்டாலின் காபி குடித்து விட்டு நாட்டுக்கோழி குழம்புடன் இட்லி சாப்பிட்டார்.
சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவி வீட்டிற்கு சென்று காபி, இட்லி நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி சாப்பிட்டார். அந்த மாணவிகள் அன்போடு அளித்த பாசி மணியை அணிந்து கொண்டார். விளிம்பு நிலை மக்களின் தைரியமான பேச்சு ஆச்சரியத்தை தருவதாகவும் என்றைக்கும் நமது அரசு துணை நிற்கும் என்றும் கூறினார்.
Recommended Video
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் பிரியா, திவ்யா, தர்ஷினி ஆகியோர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. இதனை தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை, தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து 3 மாணவிகளும் பேசினர்.
அப்போது, மாணவிகளின் கல்விக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதியளித்தார்.
இதனையடுத்து ஆவடி நரிக்குறவர் குடியிருப்பு பகுதிக்கு அமைச்சர் நாசர், ஆவடி மேயர் உதயகுமார், துணை மேயர் சூரியகுமார் ஆகியோர் நேரில் சென்றனர். மேலும், முதல்வரை சந்தித்த 3 மாணவிகள் உட்பட 40 பேரை சந்தித்து அவர்களின் கல்வி குறித்து கேட்டறிந்தனர்.
தொடர்ந்து நரிக்குறவ மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுடன் காணொலி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார். இன்னும் ஒரு வாரத்தில் தங்களை காண நேரில் வருவதாக வாக்குறுதி அளித்தார்.

சோறு போடுவீங்களா
அப்போது பேசிய முதல்வர் மு.க ஸ்டாலி,ன உங்கள் வீட்டிற்கு வந்தால் சோறு கொடுப்பீர்களா என கேட்டார். அதற்கு, தங்களுக்கு கறி சோறு போடுவதாக மாணவிகள் சந்தோஷமாக பதிலளித்தனர். அதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பாக ஒருநாள் வருவேன் என்று கூறினார்.

சொன்னதை செய்த முதல்வர்
முதல்வர் சொன்னது போலவே இன்றைய தினம் ஆவடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு சென்றார். அவரை நேரில் பார்த்த உடன் அனைவரும் உற்சாகமடைந்தனர். மாணவிகள் பூ கொடுத்தும் பாசிமணி அணிவித்தும் வரவேற்றனர். அங்கிருந்த மாணவியின் வீட்டிற்கு சென்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

டீ, இட்லி, வடை
இதனையடுத்து முதல்வருக்கு புது எவர்சில்வர் டம்பளரில் காபி கொடுக்கப்பட்டது. பின்னர் தட்டில் வைத்து இட்லி, வடை, நாட்டுக்கோழி குழம்பு, சட்னி அளிக்கப்பட்டது. அதனை அன்போடு சாப்பிட்ட முதல்வர் உணவு கொடுத்த அனைவருக்கும் நன்றி கூறினார். முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

காரமான உணவு
உணவு காரமாக இருந்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். அதற்கு அங்கிருந்தவர்களே காரமாக சாப்பிட்டால்தான் சளி இருமல் வராது என்றும் தெரிவித்தனர். முதல்வர் நேரில் வந்தது இன்னமும் கூட நம்ப முடியாமல் இருப்பதாக மாணவிகளும் பெற்றோர்களும் தெரிவித்தனர். கனவில் நடப்பது போல இருப்பதாகவும் கூறினர். சொன்னபடி மாணவிகளின் வீட்டிற்குப் போய் சாப்பிட்டு விட்டு வந்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.

விளிம்பு நிலை மக்கள்
தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், இதுபோன்ற விழாவில் பங்கேற்பதுதான் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். சென்னை மேயர், அமைச்சர், துணை முதல்வராக இருந்தபோது முதல்வராக இருந்த போதும் எத்தனையோ விழாவில் பங்கெடுத்துள்ளேன். உங்களைப் போன்ற அன்பானவர்கள் கொடுக்கும் வரவேற்பும், இதுபோன்ற விழாக்களும்தான் மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
விளிம்பு நிலை மக்களுக்கு என்றைக்கும் திமுக அரசு துணை நிற்கும் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் கூறினார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications