தொடர்ந்து சரியும் கொரோனா கிராப்.. முறையாக கட்டுப்படுத்தும் தமிழக அரசு.. இன்று 1714 பேர் பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 2000க்கும் குறைவான எண்ணிக்கையில் தமிழகத்தில் பதிவாகி வருகிறது.
புதிய கொரோனா கிளஸ்டர், ஹாட்ஸ்பாட் எதுவும் உருவாகாமல் தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பும் கூட பெரிய அளவில் கொரோனா பாதிப்பு எங்கும் ஏற்படவில்லை.

தமிழகம்
தமிழகத்தில் இன்று 1714 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,63,282 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 2311 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இன்று மட்டும் தமிழகத்தில் 18 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

நிலைமை என்ன
இதுவரை மொத்தமாக 11531 பேர் தமிழகத்தில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். 7,37,281 பேர் இதுவரை தமிழகத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கை 14740 ஆக குறைந்துள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னை
சென்னையில் இன்று 479 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 209621 ஆக அதிகரித்துள்ளது. இன்று கோவையில் 162 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46710 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று செங்கல்பட்டில் 129 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 46141பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

டெஸ்ட் எண்ணிக்கை
11266091 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று 67014 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. சோதனைகளை தமிழகம் துரிதப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் இன்று 66244 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 10982766 பேர் தமிழகத்தில் கொரோனா சோதனை செய்யப்பட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications