நாடு முழுவதும் தீவிரமடையும் கொரோனா..ஒருநாள் பாதிப்பு 13ஆயிரத்தை தாண்டியது
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 13,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கை 13ஆயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 8148 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 63,063 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 13,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 12,213 பேருக்கும், நேற்று 12,847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 83 ஆயிரத்து 793 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 8148 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,26,90,845 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது வரை இந்தியாவில் 63,063 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் ஒரேநாளில் 23 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,24,840 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 14,99,824 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இதுவரை 1,96,00,42,768 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications