செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’! ஐடி விங் நிர்வாகிகளுக்கு பறந்த கட்டளை! டிஆர்பி ராஜாவின் மாஸ் ப்ளான்!
சென்னை : திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்படும் என திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
Recommended Video
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் அந்த அணியின் செயலாளர் டி ஆர் பி ராஜா எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில மாவட்ட மற்றும் பல்வேறு அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

டிஆர்பி ராஜா
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் திராவிடம் மாதமாக கொண்டாடப்படும் என கூறினார். செப்டம்பர் மாதத்தை ஏன் திராவிட மாதமாக கொண்டாட வேண்டும் என்பது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பல்வேறு விளக்கங்களும் சமூக வலைதள பதிவுகளும் இணையத்தில் உலா வருகின்றன.

செப்டம்பர் மாதம்
அதில்,"செப்டம்பர் மாதம் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான நிகழ்வுகள் நடந்த மாதம். பெரியார், அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரைக் கொண்டாடலாம். ஆனால், இவர்கள் இருவரை மட்டுமே செப்டம்பர் வழங்கவில்லை. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும்கூட தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை.

திராவிட மாதம்
அவர் ஒரு வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோஷலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத் திட்டத்தில் ‘மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும்' என்பதான கருத்துகளும் இருந்தன. காங்கிரஸ் அதை நிராகரிக்க நீதிக்கட்சி அதனை ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934-ம் ஆண்டு 29-ம் தேதி செப்டம்பர் மாதம்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை
ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி." எனவே தான் செப்டம்பர் மாததை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக ஐடி விங் நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர்.
-
சிஎஸ்கேவில் ஏன் தமிழர்கள் சேர்க்கப்படவில்லை? இதற்காக முதல்வர் ஸ்டாலினை போராட சொன்ன டிடிவி தினகரன்! -
5 தொகுதிகளுக்கு சரி.. ஆனால் சென்னையில் 2 தொகுதிகள் கொடுங்க.. திமுகவுக்கு சிபிஎம் விதித்த நிபந்தனை! -
மதிமுக - இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் விரும்பும் தொகுதிகள் எது? திமுக கையில் முடிவு.. இதோ லிஸ்ட் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திமுகவிடம் 10 தொகுதிக்கான பட்டியலை கொடுத்த இந்திய கம்யூனிஸ்ட்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள் -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
வீட்டிற்குள்ளேயே முடங்கிய விஜய்.. இவரை நம்பி போட்ட பிளான் எல்லாம்.. அப்செட்டில் தவெக நிர்வாகிகள்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி முதல் கல்வி கடன் ரத்து வரை! 2021ல் திமுக, அதிமுக கொடுத்த வாக்குறுதிகள்! -
ஒன்றரை மாதத்தில் என்ன ஆகும்? அரியணை ஆட்டம்.. 2016 Vs 2021.. தமிழக தேர்தல் களத்தின் 'பவர்' ரிப்போர்ட்












Click it and Unblock the Notifications