செப்டம்பர் இனி ‘திராவிட மாதம்’! ஐடி விங் நிர்வாகிகளுக்கு பறந்த கட்டளை! டிஆர்பி ராஜாவின் மாஸ் ப்ளான்!
சென்னை : திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் வரும் செப்டம்பர் மாதம் திராவிட மாதமாக கொண்டாடப்படும் என திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.
Recommended Video
திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் ஆலோசனைக் கூட்டம் அந்த அணியின் செயலாளர் டி ஆர் பி ராஜா எம்எல்ஏ தலைமையில் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது.
திமுக தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில மாவட்ட மற்றும் பல்வேறு அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இந்தக் கூட்டத்தில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

டிஆர்பி ராஜா
இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டிஆர்பி ராஜா திராவிட சிறப்புகளை அனைத்து மாவட்ட மக்களுக்கும் எடுத்துரைக்கும் வகையில் வருகின்ற செப்டம்பர் மாதம் திராவிடம் மாதமாக கொண்டாடப்படும் என கூறினார். செப்டம்பர் மாதத்தை ஏன் திராவிட மாதமாக கொண்டாட வேண்டும் என்பது குறித்து திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பல்வேறு விளக்கங்களும் சமூக வலைதள பதிவுகளும் இணையத்தில் உலா வருகின்றன.

செப்டம்பர் மாதம்
அதில்,"செப்டம்பர் மாதம் திராவிட இயக்க அரசியலில் முக்கியமான நிகழ்வுகள் நடந்த மாதம். பெரியார், அண்ணா இருவரும் பிறந்த மாதம் என்பதற்காகவே செப்டம்பரைக் கொண்டாடலாம். ஆனால், இவர்கள் இருவரை மட்டுமே செப்டம்பர் வழங்கவில்லை. இன்னும் சில ஆயுதங்களையும் படிப்பினைகளையும்கூட தமிழகத்துக்கு வழங்கியுள்ளது. காங்கிரஸின் எதிரி என்பதற்காக மட்டும் நீதிக்கட்சியை வழிநடத்த பெரியார் ஒப்புக்கொள்ளவில்லை.

திராவிட மாதம்
அவர் ஒரு வேலைத் திட்டத்தை காங்கிரஸ் கட்சிக்கும் நீதிக்கட்சிக்கும் அனுப்பி வைத்தார். விவசாய நலன், தொழிலாளர் நலன் என சோஷலிசப் பாதையில் அமைக்கப்பட்டிருந்த அந்த வேலைத் திட்டத்தில் ‘மதங்கள் அரசியலில், நிர்வாகத்தில் எவ்வித சம்பந்தமும் குறிப்பும் பெறாமல் இருக்க வேண்டும்' என்பதான கருத்துகளும் இருந்தன. காங்கிரஸ் அதை நிராகரிக்க நீதிக்கட்சி அதனை ஏற்றுக்கொண்டது. ஏற்றுக்கொண்ட தினம் 1934-ம் ஆண்டு 29-ம் தேதி செப்டம்பர் மாதம்.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை
ஆண்டு தமிழர்கள் மேல் திணிக்கப்பட்ட இந்தியை எதிர்த்து, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் படை ஒன்று உருவானது. பாவேந்தர் பாரதிதாசனின் பாடலைப் பாடியபடியே ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டது அப்படை. திருச்சி உறையூரில் தொடங்கி 234 ஊர்களைக் கடந்து, 87 பொதுக்கூட்டங்களை நடத்தி, 42 நாட்களாக நடந்த நெடும்பயணம் நிறைவுற்ற தினம் செப்டம்பர் மாதம் 11-ம் தேதி." எனவே தான் செப்டம்பர் மாததை திராவிட மாதமாக கொண்டாட முடிவு செய்திருப்பதாக ஐடி விங் நிர்வாகிகள் பதிவிட்டு வருகின்றனர்.
-
ஏமாற்றும் ராகுல்.. ஸ்டாலினுடன் கைகோர்க்கும் கெஜ்ரிவால்.. திமுகவுக்கு ஆதரவாக 2 நாள் பிரசாரம் -
தொகுதி மறுவரையறை.. திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
ரூ.8,000 கூப்பன்.. திமுகவிற்கு வார்னிங் கொடுத்த தமிழக தேர்தல் அதிகாரி -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு! உடனே விண்ணப்பிங்க












Click it and Unblock the Notifications