”சென்னை கனமழை பாதிப்பு" அமைதி காக்கும் அதிமுக, பாஜக.. சாதித்து காட்டியதா திமுக அரசு?
சென்னை: சென்னையில் கனமழை பாதிப்பு குறித்து எதிர்க்கட்சிகள் ஆய்வுக்கு செல்லாமல் இருக்கும் நிலை நீடித்து வருகிறது. இதற்கு திமுக அரசு கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து சிறப்பாக செயல்பட்டதே காரணம் என்று திமுக ஆதரவாளர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தொடங்கிவிட்டல் சென்னை மக்களுக்கு தானாகவே அச்சம் எழுந்துவிடும். அதற்கு வடகிழக்கு பருவமழையால் தேங்கும் மழைநீரும், அதீத பாதிப்புகளுமே காரணமாக இருந்து வந்தன.
வடசென்னை, தென் சென்னை என சென்னையின் அனைத்து பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பெருவெள்ளம் என்று ட்ரோன் கேமராவில் எடுக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் காட்டப்படும் காட்சிகள் மற்ற மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தும்.

கடந்த ஆண்டு மழை பாதிப்பு
எதிர்க்கட்சிகள் மக்களுக்கு நிவாரண அளிக்க ஆய்வு நடத்தி விமர்சித்து வருவார்கள். கடந்த முறை பாஜக தலைவர் அண்ணாமலை படகில் சென்று ஆய்வு நடத்தி புகைப்படம் எடுத்தது திமுக அரசை விமர்சித்தார். இதேபோல் அதிமுக சார்பாகவும் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மக்களுக்கு நிவாரணம் அளித்து திமுகவை கடுமையாக விமர்சித்தார். அண்மையில் சேலம், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு கூட எடப்பாடி பழனிசாமி ஆய்வு நடத்தி மக்களுக்கு உதவிகள் வழங்கினார்.

ஒரே நாளில் கொட்டிய மழை
ஆனால் நடப்பு ஆண்டில் அதனை எதிர்கொள்ள மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடுக்கிவிட்டிருந்தாலும், சென்னை மக்களிடையே அச்சம் இருந்து வந்தது. அதற்கு மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக முடிவடைந்ததா என்ற கேள்விக்கு சரியான விடை கிடைக்காததும் ஒரு காரணம். இதற்கேற்றாற் போல் அக்.29ம் தேதி இரவு முதல் தொடர் கனமழை பெய்து வந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரு நாளில் பெய்ததாக வானிலை ஆய்வு மைய அறிக்கை தெரிவித்தது.

வேகமாக வடிந்த மழைநீர்
இதனால் சாலைகள், சுரங்கப் பாதைகள், பாலங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் சாலைகளில் தேங்கிய மழைநீர், வேகமாக வடிந்தது. வடசென்னையை தவிர்த்து அனைத்து இடங்களிலும் மழைநீர் அகற்றப்பட்டு, தமிழக அரசு பாதிப்பு ஏற்படாத வகையில் பணிகளை மேற்கொண்டுள்ளது.

அமைதி காக்கும் பாஜக, அதிமுக
வழக்கமாக மழை காலங்களில் ஆய்வுக்கு சென்று தமிழக அரசை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் இம்முறை எங்கும் இதுவரை ஆய்வு நடத்திவில்லை. திமுகவை கடுமையாக விமர்சிக்கும் பாஜக கூட கனமழை பாதிப்பு குறித்து எவ்வித ஆய்வும் நடத்தவில்லை. மறுபக்கம் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி வெறும் அறிக்கை மட்டும் வெளியிட்டு அமைதி காத்து வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின்
2016ம் ஆண்டு முதல் 2020 வரை சென்னையில் எப்போதும் கனமழை பெய்து மக்கள் பாதிக்கப்படுகிறார்களோ, அப்போது எல்லாம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரடியாக களத்திற்கு சென்று மக்களை சந்தித்து உதவிகளை வழங்கினார். அதேபோல் ஆளுங்கட்சி செய்திருக்க வேண்டிய பணிகளையும் பட்டியலிட்டு விமர்சித்தார்.

உடன்பிறப்புகள் பெருமிதம்
ஆனால் நடப்பாண்டில் எதிர்க்கட்சிகள் அமைதி காக்கும் நிலையில், திமுக ஆதரவாளர்கள் தரப்பில் அதிமுக 10 ஆண்டுகளில் செய்யாத பணிகளை, ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடித்துள்ளோம் என்று பேசி வருகின்றனர். அதற்கு ஆட்சிக்கு வந்ததும், திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து மழைநீர் வடிகால் பணிகளுக்காக பணியாற்றியதாகவும், அதுமட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகள் பேச முடியாத அளவிற்கு சிறப்பாக கனமழையை எதிர்கொண்டுள்ளதாக திமுக தரப்பில் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
-
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
“தேமுதிக கண்டிப்பாக விட்டுக்கொடுக்கும்” பிரேமலதா சொன்ன வார்த்தையால் திமுக தலைமை குஷி! -
“ஒரு கார் வாங்குற தகுதி கூட கேப்டன் குடும்பத்திற்கு இல்லையா?”.. பிரேமலதா விஜயகாந்த் ஆவேசம்! -
என்னை முதல்வராக்கினால்! பெண்களுக்கு ரூ 1 லட்சம்! ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ பேச்சால் கோபத்தில் தலைமை -
6 சீட் கேட்டு அடம் பிடிக்கும் மார்க்சிஸ்ட்.. 5ல் உறுதியாக ஸ்டாலின்! இன்று திமுகவுடன் மீண்டும் பேச்சு -
ஸ்பெக்ட்ரம் ஊழல் புகார்.. லத்திகா சரண் சர்ச்சை?: எதிர்க்கட்சி தகுதி இழந்த திமுக - 2011ல் ஜெ ஆட்சி! -
Duraimurugan: தவாக வேல்முருகன் விலகியது குறித்த கேள்விக்கு! துரைமுருகனின் face expression-ஐ பாருங்க -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி!











Click it and Unblock the Notifications