என்ன நெருக்கடி தந்தாலும் இடஒதுக்கீட்டு உரிமையை விட்டு தர கூடாது.. ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: நலிந்த முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டு சட்டத்தை, தேர்தலுக்கு முன்பாக மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னேறிய பிரிவினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆலோசிக்க நடைபெற்று வரும் அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு கடந்த 30 ஆண்டுகளாக தங்கு தடையின்றி செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

மத்திய அரசின் புதிய சட்டம் இடஒதுக்கீட்டு கொள்கையை நீர்த்து போக செய்து விடும். எனவே மத்திய அரசின் புதிய சட்டத்தை தமிழக அரசு அனுமதிகக் கூடாது என வலியுறுத்தினார்.
மேலும் பேசிய ஸ்டாலின் 25 சதவீத எம்பிபிஎஸ் இடங்களை கூடுதலாக தருவதாக மத்திய அரசு சொல்வதை நம்பி, 10 சதவீத இடஒதுக்கீட்டை ஏற்க கூடாது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா என யாருமே இட ஒதுக்கீட்டில் சமரசம் செய்ததில்லை.
எனவே நமது முன்னோர் நமக்கு வழங்கி இருக்கும் இடஒதுக்கீட்டு உரிமையை நாம் எந்த காலத்திலும், எத்தகைய நெருக்கடிகளுக்காகவும் விட்டு தர கூடாது என கூறியுள்ளார் ஸ்டாலின்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீடு சட்டம் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மேலும் சமூகநீதி கொள்கையில் கை வைக்க இதுவரை நாட்டில் இருந்த 14 பிரதமர்களும் துணிந்ததில்லை. எனவே சமூகநீதியை காக்க அரசு எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் எதிர்கட்சியான திமுக முழுஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.
-
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
69% இடஒதுக்கீடு வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்.. மனுக்கள் தள்ளுபடி.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications