என்னாது.. மீண்டும் லாக்டவுனா.. அறிவிப்பு வெளியாகிறதா.. புதுவகை கொரோனாவால் தீயாய் பரவும் தகவல்
தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி முடிந்ததுமே, லாக்டவுனுக்கு வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டு வரும் நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகுமா என்ற சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்ற குறைந்து வந்துள்ள போதிலும், முழுமையாக நீங்கவில்லை.. அதனால் தளர்வுகளும் முற்றிலுமாக அறிவிக்கப்படவில்லை.
காரணம், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்கலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

மீண்டும் லாக்டவுன்?
அதனால்தான், இன்று நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் தள்ளி வைக்கப்படலாம் என்றே கணிக்கப்பட்டது. பிறகு திடுதிப்பென தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டது.. எனினும், தேர்தல் விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டது.. பிரச்சாரங்களும் பெரிதாக இல்லை என்பதுடன், கூடுதல் கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருந்தது ஓரளவு ஆதரவான விஷயம்தான்..

விதிமுறைகள்
காரணம், தமிழகத்தில் கடந்த மாதமே ஊரடங்கு போடப்பட்டிருக்க வேண்டியது என்கிறார்கள்.,.. உள்ளாட்சி தேர்தலுக்காகவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும், இந்த தேர்தல் முடிந்து மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு ஊரடங்கு விதிமுறைகள் கடுமையாக்கப்படும் என்றும் முணுமுணுப்புகளும் எழுந்தபடியே உள்ளதால், மறுபடியும் நமக்கு லாக்டவுன் போடப்பட்டுவிடுமா என்ற சந்தேகம் தீவிரமாக உருவெடுத்துள்ளது..

ஊரடங்கு
இப்படி ஒரு தகவல், வாட்ஸ்அப்களில் இன்றைய தினம் தீவிரமாக பரவி கொண்டிருப்பதுதான்.. ஆனால், தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு விதிக்கப்படும் என்பது தவறான தகவல் என்று கோட்டை வட்டாரத்தில் சொல்லப்படுகிறது... ஒருவேளை தேர்தல் சமயத்தில் கூட்டம் கூட்டியது, மாஸ்க் போடாதது என விதிமுறைகள் மீறப்பட்டு, அதனால் தொற்று எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளதே தவிர, லாக்டவுன் போடும் அளவுக்கு நிலைமை மோசம் இல்லை என்கிறது இன்னொரு தரப்பு.

கடிதம்
இன்னொன்றையும் சொல்கிறார்.. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுகளுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.. அதில், "கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை கைவிடலாம். புதிய பாதிப்புகள், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை போன்றவற்றைக் கருத்தில் கொண்டு, கூடுதல் கட்டுப்பாடுகளை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மதிப்பாய்வு செய்து திருத்தவோ அல்லது முடிவுக்குக் கொண்டு வருவதோ பயனுள்ளதாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
Recommended Video


வாய்ப்பு
எனவே மத்திய அரசின் இப்போதைய முடிவுப்படி, தளர்வுகளுக்குதான் நமக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதற்கு நடுவில் இன்னொன்றையும் சொல்கிறார்கள்.. BA.2 கொரோனா எனப்படும் ஸ்டெல்த் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் தற்போது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது.. ஒருவேளை, கொரோனா தொடர்ந்து உருமாறி வருவதால், அதை வைத்தே நமக்கு லாக்டவுன் முடிவாகும் என்று தெரிகிறது..!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications