சட்டசபை தேர்தல்: ஒட்டப்பிடாரம் தொகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் போட்டி?
சென்னை: சட்டசபை தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகன் ஷ்யாம் கிருஷ்ணசாமி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேவேந்திர குல வேளாளர்களை பட்டியல் அட்டவணையில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் நீண்டகால கோரிக்கை. ஆனால் மத்திய அரசு 7 பிரிவினரை ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என மட்டும் அழைக்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

ஷ்யாம் கிருஷ்ணசாமி
இதில் டாக்டர் கிருஷ்ணசாமி அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் மகன் ஷ்யாமை களமிறக்கப் போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஒட்டப்பிடாரமும் கிருஷ்ணசாமியும்
1996, 2011 ஆகிய சட்டசபை தேர்தல்களில் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் சுந்தரராஜனிடம் வெறும் 493 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி. 2001 சட்டசபை தேர்தலிலும் அதிமுக வேட்பாளரிடம் வெறும் 651 வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தார் டாக்டர் கிருஷ்ணசாமி.

ஷ்யாம் போட்டி?
இம்முறை அதிமுக கூட்டணியிலேயே புதிய தமிழகம் கட்சி இடம்பெறக் கூடிய சாத்தியம் இருக்கிறது. இதனால் அதிமுக, புதிய தமிழகம் வாக்குகள் இணைந்து கிடக்கும் நிலையில் வெற்றி எளிதாக இருக்கும் என்பது டாக்டர் கிருஷ்ணசாமியின் கணக்கு என்கிறார்கள். அதனால் மகன் ஷ்யாமை ஒட்டப்பிடாரம் தொகுதியில் நிற்க வைத்துவிட்டால் வெற்றி எளிது என்கிற முடிவில் இருக்கிறாராம் டாக்டர் கிருஷ்ணசாமி.

புதிய தமிழகம் கட்சி நிலை
புதிய தமிழகம் கட்சியின் மாநாட்டு மேடைகளில் தொடர்ந்து ஷ்யாம் கிருஷ்ணசாமியும் பங்கேற்று வருகிறார். அவரை அடுத்த தலைவராக புதிய தமிழகம் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications