நானே ஓசில குடிச்சிட்டு வரேன்.. என்கிட்ட ஃபைன் கேக்குறீங்க.. சென்னையில் போலீஸாருடன் பெண் வாக்குவாதம்
சென்னை: சென்னையில் பெண் ஒருவர் குடிபோதையில் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்யும் காட்சிகள் வைரலாகி வருகிறது. இதையடுத்து போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் ஆங்காங்கே முக்கிய சந்திப்புகளில் நின்றுக் கொண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுவது, பைக்கில் 3 பேர் செல்வது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

வாகன தணிக்கை
இந்த நிலையில் நேற்று இரவு சைதாப்பேட்டை சாலையில் வாகன சோதனைகளில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக கார் ஒன்று தள்ளாடியபடியே வந்தது. இதை கண்டதும் போலீஸார் அந்த காரை நிறுத்தினர். அப்போது உள்ளே பெண் ஒருவர் காரை இயக்கியதும் அவர் கண்கள் செருகி அதிக போதையில் இருந்ததும் தெரியவந்தது.

கீழே இறங்குமாறு அழைத்த போலீஸ்
இதையடுத்து அவரை கீழே இறங்குமாறு கூறினர். அதற்கு அந்த பெண் ஏன் என கேட்டார். அதற்கு போலீஸார் குடி போதையில் இருக்கிறார்களா என்பதை செக் செய்யும் கருவியை (ப்ரீதலைசர்) கொண்டு சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுகிறோம் என கூறினர். அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்தார்.

கார் சாவி
உடனே போலீஸார் கார் சாவியை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர். பின்னர் பின்னாடியே அந்த பெண் வந்தார். அவருக்கு மது குடிபோதை இருக்கிறதா என சோதனை செய்யும் கருவியை வைத்து ஊத சொன்னார்கள். அவர் ஊதிய போது அளவுக்கு அதிகமாக குடித்திருப்பது தெரியவந்தது. மேலும் சாலையில் நிற்கும் போதும் நிதானம் இல்லாமல் இருந்தார்.

குடித்துவிட்டவாகனம் ஓட்டுவது தவறு
பின்னர் போலீஸார் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது தவறில்லையா, இப்படி செய்யலாமா என கேட்டனர். அதற்கு அந்த பெண் யாருதான் சார் குடித்துவிட்டு வண்டி ஓட்டலை. நேத்துலாம் யாரையும் பிடிக்காமல் இன்னிக்கு என்ன மட்டும் வந்து ஏன் பிடிக்கிறீங்க என கேட்டார். அதற்கு அபராதம் செலுத்துவதற்கான சலானை போலீஸார் கையடக்க கருவியில் தயார் செய்தனர்.

அபராதம்
அதற்கு அந்த பெண் சார் என்கிட்ட கொடுப்பதற்கு எதுவும் இல்லை, அபராதம் ஏன் போடறீங்க. என்னால் கட்ட முடியாது, பெண் என்பதால் என்னை நிறுத்தி இப்படி செய்கிறீர்களா, நீங்கள் என்கிட்ட என்ன சார் சொன்னீங்க? இந்த மெஷினில் ஊதி பார்த்துவிட்டு சாவியை கொடுக்கிறேனுதானே சொன்னீங்க. இப்ப ஏன் சாவி கொடுக்க மாட்றீங்க என கேட்டார்.

போலீஸ் ஸ்டேஷன்
மேலும் வாங்க சார் வாங்க போலீஸ் ஸ்டேஷன் போகலாம் என அழைத்தார். பின்னர் சலானை ஏன் போடீங்க! யாரை கேட்டு எனக்கு ஃபைன் போட்டீங்க! என்னால இப்ப பணம் கொடுக்க முடியாது என்கிறார். பொதுவாக அந்த சலானை பெற்று கொண்டு அடுத்த நாள் போலீஸ் நிலையத்தில்தான் பணத்தை செலுத்த வேண்டும். ஆனால் இதை சொல்ல போலீஸார் முற்படும் போது அவர்களை சொல்லவிடாமல் அந்த பெண் பாட்டுக்கு புலம்பி கொண்டே இருந்தார். என்னால கொடுக்க முடியாது, நான் என்ன உங்கள மாதிரி வேலையா பார்க்கிறேன். நானே ஓசியில் குடித்துவிட்டு வருகிறேன். எனக்கு அபராதம் போடுகிறீர்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications