எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 மணி நேர விசாரணை... விரைவில் கைது?
சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அதிமுக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆஜராகியுள்ளார்.
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் 2 வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஆலந்தூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேற்று 8 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். விசாரணைக்கு பிறகு விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த ஜூலை 22ஆம் தேதி சோதனை நடத்தினர். கரூரில்உள்ள வீடு, நிறுவனங்கள், மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகருக்குசொந்தமான இடங்கள், சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள விஜயபாஸ்கர் வீடு, அவரதுஉதவியாளர்கள், ஆதரவாளர்களின் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. இதில், கணக்கில் வராத ரூ.25.56 லட்சத்தை போலீஸார் கைப்பற்றினர்.

சொத்து ஆவணங்கள், முதலீட்டு ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆவணங்களையும் கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
எம்ஆர் விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக 55 சதவீத சொத்துகளை சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட போது தனது வேட்புமனுவில் ரூ.2.51 கோடி சொத்து இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட போது சொத்து மதிப்பாக ரூ.8.62 கோடி என வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து, எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரர் சேகர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புதுறையினர் கடந்த மாதம் 27ஆம்தேதி சம்மன் அனுப்பினர். உள்ளாட்சித் தேர்தலை காரணம் காட்டிநேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு அவரது தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அக்டோபர் 25ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் ஆஜராகுமாறு 2வது முறையாக லஞ்சஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, ஆலந்தூர் லஞ்சஒழிப்புத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் நேற்று காலை ஆஜராகினர். அவர்களிடம் 6 அதிகாரிகள் விசாரணை நடத்தினர். காலை 12 மணி அளவில் தொடங்கிய விசாரணை மாலை வரை நீடித்தது.
நேற்றைய தினம் 8 மணி நேர விசாரணை முடிந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து லஞ்சஒழிப்புத் துறை அலுவலகத்தில் ஆஜராக விஜயபாஸ்கரிடம் அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணைக்கு பிறகு விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications