Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கே.பி. முனுசாமியை தோற்கடிக்க 4 கோடி செலவா? அந்த மாஜி என்ன செய்தார் தெரியுமா? ஓபிஎஸ் ஆதரவாளர் சுளீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கே.பி. முனுசாமியை தோற்கடிக்க ரூ 4 கோடி செலவு செய்தோமா, யாருக்கு எதிராக யார் செயல்பட்டனர் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று என்று ஓபிஎஸ் ஆதரவாளர் மறுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏக்கள் கிருஷ்ணமூர்த்தி , கோவிந்தராஜ், சூலகிரி ஒன்றிய சேர்மேன் ஹேம்நாத் உள்ளிட்ட நிர்வாகிகள் ஓ பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின் போது கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கோவிந்தராஜ் கருங்காலிகள என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக எம்எல்ஏ அசோக் குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

கட்சிக்கு துரோகம்

கட்சிக்கு துரோகம்

அப்போது அவர் கூறுகையில் கிருஷ்ணகிரி மாவட்டததில் அதிமுகவை குழி தோண்டி புதைத்துவிட்டார் முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஊத்தங்கரை ஆகிய 3 தொகுதிகளிலும அதிமுக வெற்றி பெற்றது.

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி

கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி

ஆனால கடந்த 2016ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளியில் அதிமுக தோல்வி அடைந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் முன்னாள் எம்எல்ஏக்களான கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் ஒரு முறை கூட வாக்கு சேகரிக்க வரவில்லை. முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமியும் நானும் தேர்தலில் வெறற பெறவே கூடாது என்பதற்காகவே ரூ 4 கோடி வரை செலவு செய்து திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு அதிமுகவுக்கு துரோகம் செய்தனர்.

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள்

கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர்கள்

தற்போது கட்சியிலிருந்து ஓரங்கப்பட்டதால் அவர்கள் எல்லாம் ஓபிஎஸ்ஸை சந்தித்துள்ளனர் என அசோக்குமார் எம்எல்ஏ தெரிவித்தார். இந்த விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் இன்றைய தினம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதன் மாவட்டச் செயலாளராக நியமக்கப்பட்ட கோவிந்தராஜ், செய்தியாளர்களை சந்தித்தார்.

பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தம்

பணி செய்ய விடாமல் தடுத்து நிறுத்தம்

அப்போது அவரிடம் முனுசாமி குறித்த விவகாரம் எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் யாருக்கு எதிராக யார் செயல்பட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு எதிராக இங்குள்ள நிர்வாகிகளை கே பி முனுசாமி தேர்தல் பணி செய்ய விடாமல் பென்னாகரம் தொகுதிக்கு அழைத்து சென்றார். இது அனைவருக்குமே தெரியும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+