28 தமிழக சுங்க சாவடிகளில் இன்று முதல் 15% கட்டணம் உயர்வு- அத்தியாவசிய பொருட்கள் விலை மேலும் உயர்வு!
சென்னை: தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் 15% கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது நடைமுறைக்கு வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
நாட்டில் மொத்தம் 800க்கும் அதிகமான சுங்க சாவடிகள் இயங்கி வருகின்றன. இதில் 600க்கும் மேற்பட்டவைகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையிலான சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 48 சுங்க் சாவடிகள் உள்ளன. இந்த சுங்க சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் பகல் கொள்ளை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டு. சுங்கச் சாவடிகளை தமிழகத்தில் அகற்ற வேண்டும் என்பது பொதுமக்கள், அரசியல் கட்சிகள் கோரிக்கை.
சுங்க சாவடிகளுக்கு எதிராக தமிழகத்தில் பல கட்டப் போராட்டங்கள் நடந்துள்ளன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சியினர் இந்த சுங்க சாவடி கட்டணங்களை எதிர்த்து அவற்றை தாக்கியும் உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டுகள் அல்லது அதற்காக செய்யப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரை மட்டுமே முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும்; அதன்பின்னர் பராமரிப்புக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும் என்பதுதான் விதி. ஆனால், தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் பெரும்பாலானவை அமைக்கப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அதேபோல் பெரும்பாலான சாலைகளுக்கு செய்யப்பட்ட முதலீடு எடுக்கப்பட்டு விட்டது. அத்தகைய சாலைகளில் பராமரிப்புக்காக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், எந்தக் காரணத்தையும் கூறாமலேயே அனைத்து சாலைகளிலும் முழுமையான சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவது எந்தவகையில் நியாயம்? எனவும் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் 28 சுங்க சாவடிகளில் மேலும் 15% கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இந்த 15% கூடுதல் கட்டண உயர்வு, 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் அமலுக்கு வந்தது. தருமபுரி, திருச்சி சமயபுரம், கரூர் , உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, ஓமலூர் என 28 சுங்க சாவடிகளில் ரூ5 முதல் ரூ150 வரை கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கட்டண உயர்வால் அத்தியாவசியப் பொருட்கள் விலை மேலும் கிடுகிடுவென அதிகரிக்க உள்ளது. இது பொதுமக்களை மிகக் கடுமையாக பாதிக்கும்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications