கொல்லாம விடமாட்டோம்! தூங்க விடாமல் மிரட்டல்கள்! பாதுகாப்பு கொடுங்க! போலீசுக்கு ஓடிய சி.வி.சண்முகம்!
சென்னை : பரபரப்புகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்து முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் எடப்பாடி ஆதரவு நிர்வாகியுமான சிவி சண்முகத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அவருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சண்டை, சச்சரவுகள், நீதிமன்றம், காவல்துறை கெடுபிடி உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த 23ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஏற்கெனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்புதல் பெற்ற 23 தீர்மானங்களை தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதிமுக பொதுக்குழு
இதனால் இதனால் ஒற்றைத் தலைமை தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பில்லாமல் போனதால் ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்தனர். இது இபிஎஸ் தரப்புக்கு லேசான பின்னடைவாகக் கருதப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தீர்மானங்களை நிறைவேற்ற ஓபிஎஸ் முன்மொழிந்து, ஈபிஎஸ் வழிமொழிந்த நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாக ஆவேசமாக கோஷம் எழுப்பினார்.

விழுப்புரம் சிவி சண்முகம்
மேலும் ஒபிஎஸ், இபிஎஸ் பதவிகள் காலாவதியாகிவிட்டதாகக் கூறிய சிவி சண்முகம் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்நிலையில், அவருக்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகள் மூலம் ஆபாசமாகப் பேசி கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொலை மிரட்டல்
இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அவரின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து பேட்டியளித்த வழக்கறிஞர் பால முருகன், "சண்முகத்திற்கு கடந்த சில தினங்களாக கொலை மிரட்டல் விடுத்து பல செய்திகள் வாட்ஸ் ஆப் குறுஞ்செய்திகளும் அழைப்புகளும் வருகின்றன.

பாதுகாப்பு வாபஸ்
இதனால் காவல்துறை ஆணையர் சைலேந்திர பாபுவிடம் புகார் மனு அளித்துள்ளோம். புகாரை விசாரித்து அவர்களை கைது செய்வதாக அவர் தெரிவித்துள்ளார். அனைத்து ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்" என்று கூறினார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் சிவி சண்முகத்துக்கு வழங்கப்பட்டு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
அந்த முடிவை எடுத்துவிட்டாரா? எடப்பாடி தரப்பிடம் அதிமுக அலுவலக சாவியை கொடுத்த சிவி சண்முகம்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications