பாஜகவிலிருந்து காயத்ரி விலக அலிஷா அப்துல்லா காரணமா? ட்வீட்டில் அந்த வார்த்தையை நோட் பண்ணீங்களா?
சென்னை: பாஜகவிலிருந்து விலகியதற்கான காரணங்களை அடுக்கிய காயத்ரி, அதில் முக்கியமாக கூறியிருந்தது சம உரிமை என்பதுதான். இவர் யாரை எந்த விஷயத்தை மனதில் வைத்து பேசியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தமிழக பாஜகவிலிருந்து நான் விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுத்துள்ளேன். இதற்கான காரணம் என்னவெனில் என்னிடம் விசாரணை நடத்த சந்தர்ப்பம் வழங்காதது ஆகும்.
அது போல் சம உரிமையும் கொடுக்கவில்லை பெண்களுக்கு மரியாதையும் கொடுக்கவில்லை. அண்ணாமலையின் தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே வெளியே இருந்து டிரோல் செய்யப்படுவதே சிறப்பு என உணர்கிறேன்.

உண்மையான காரியகர்த்தாக்கள்
உண்மையான காரியகர்த்தாகள் குறித்து யாருமே கவலைப்படுவதில்லை. உண்மையான காரியகர்த்தாக்களை அண்ணாமலையால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். பாஜக சிறப்பாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். மோடி அவர்களே நீங்கள் என்றுமே எனக்கு ஸ்பெஷல்தான். நீங்கள் தேச தந்தை. என்னுடைய விஸ்வ குரு, சிறந்த தலைவர்.

சாணக்கிய குரு
அமித்ஷா அவர்களே நீங்கள் எனது சாணக்கிய குரு. இன்று நான் ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த புகழ் எல்லாமே அண்ணாமலையையே சாரும். அவர் மிகவும் மோசமான பொய்யர், 8 ஆண்டுகளாக என் மீது அன்பையும் மரியாதையையும் காட்டிய அனைத்து காரியகர்த்தாக்களுக்கும் எனது நன்றி. இத்தனை ஆண்டுகள் பயணித்தது சிறப்பான பயணம் என காயத்ரி ட்வீட் போட்டுள்ளார்.

சம உரிமை
இதில் முக்கியமாக அவர் சொல்லும் விஷயம் என்னவெனில் சம உரிமை. அதாவது அலிஷா அப்துல்லா குறித்துதான் அவர் கூறுகிறார். அண்மையில் அலிஷா அப்துல்லா ஒரு பேட்டி கொடுத்தார். அதில் திருச்சி சூர்யா சிவா என்னை பற்றி அவதூறாக பேசியுள்ளார். அவர் என்னை சந்திக்க எனது அலுவலகத்திற்கு வந்த போது எனது ஆடை குறித்தும் உடல் அங்கங்கள் குறித்தும் பேசியிருந்தார்.

வீடியோ ஆதாரம்
இதெல்லாம் என்னிடம் வீடியோவாக ஆதாரம் இருக்கிறது. இது என் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. நான் ஹனி டிராப் செய்யவில்லை. எனக்கு நடந்த பிரச்சினை குறித்து அண்ணாமலையிடம் கூறியிருந்தேன். அவர் தைரியமாக பிரஸ் மீட் கொடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அதனால்தான் நான் கொடுக்கிறேன். எனக்கு அண்ணாமலை மிகவும் சப்போர்ட்டாக இருக்கிறார். அதனால் எனக்கு எந்த பயமும் இல்லை என அலிஷா அப்துல்லா கூறியிருந்தார்.

காயத்ரி ரகுராம்
இந்த பேட்டியை பார்த்த காயத்ரி ரகுராம், அலிஷா அப்துல்லா பொது வெளியில் தன்னுடைய பிரச்சினைகளை பேச அனுமதி உள்ள போது அது எனக்கு ஏன் மறுக்கப்படுகிறது? துபாய் ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அண்ணாமலை என்னை பற்றி அவதூறாக பேசியிருந்தார். எந்த பெண்ணையும் அவமதிக்கும் செயலை நான் அனுமதிக்க மாட்டேன். அலிஷா அப்துல்லாவை கட்சி அலுவலகத்தில் பேச வைத்துள்ளீர்கள். ஆனால் சம உரிமை எனக்கு ஏன் இல்லை. என்னிடம் ஆதாரம் உள்ளது என கூறியுள்ளார்.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
4 மணி நேரம்தான் தூக்கம்.. போனை போட்டு விளாசிய ஸ்டாலின்.. விக்கித்த தலைகள்.. என்ன நடந்தது? -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
பழைய நியூஸ் பேப்பரை காட்டி பிரச்சாரம் செய்யும் எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலினுக்கு பதிலடி -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
காங்கிரஸுக்கு வில்லன் காங்கிரஸ் தான்.. திடீரென டெல்லிக்கு ஓடிய கர்நாடக MLAக்கள்! பதறும் சித்தராமையா












Click it and Unblock the Notifications