உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா கடந்த திங்கள் கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

யஷ்வந்த் சின்ஹா
கேரளாவில் உள்ள பத்மநாதபுரம் கோவில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய யஷ்வந்த் சின்ஹா, பின்னர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்தித்து ஆதரவு கோரினார். கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். யஷ்வந்த் சின்ஹாவை வாழ்த்தி திமுக கூட்டணித் தலைவர்கள் பேசினர்.

கூட்டணி கட்சியினர் ஆதரவு
சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற தலைவர் நாகை மாலி பேசும் போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. மதவெறி சக்திகளுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்கும் நடைபெறும் தேர்தல் என்று கூறினார். வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேராதரவை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

முக்கியமான தேர்தல்
சிபிஐ சட்டமன்ற கட்சித்தலைவர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசியதோடு ஆதரவையும் தெரிவித்தனர். இது தேர்தல் என்பதையும் கடந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான உங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த மேடையில் தலைவர்கள் அமர்ந்திருப்பது கருணாநிதியின் இதயம் போல இருப்பதாகவும் அவரும் உங்களை தமிழகத்தின் சார்பில் வாழ்த்துவார் என்றும் கூறினார் விசிக எம்எல்ஏ. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்துக்களை கூறி ஆதரவினை தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்றும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.
-
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications