உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.. முதல்வர் ஸ்டாலின், கூட்டணி தலைவர்கள் வாழ்த்து
குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் உன்னதமான உயர்ந்த தலைவர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு வாழ்த்துக்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Recommended Video
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவி காலம் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 18ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதனையடுத்து குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பழங்குடியின பெண் தலைவர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேபோல் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு கடந்த வெள்ளிக்கிழமை வேட்பு மனுவை தாக்கல் செய்த நிலையில், யஷ்வந்த் சின்ஹா கடந்த திங்கள் கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்ட நிலையில், இருவரது வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

யஷ்வந்த் சின்ஹா
கேரளாவில் உள்ள பத்மநாதபுரம் கோவில் சாமி தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை தொடங்கிய யஷ்வந்த் சின்ஹா, பின்னர் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யஷ்வந்த் சின்ஹா சந்தித்து ஆதரவு கோரினார். கலைஞர் அரங்கத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். யஷ்வந்த் சின்ஹாவை வாழ்த்தி திமுக கூட்டணித் தலைவர்கள் பேசினர்.

கூட்டணி கட்சியினர் ஆதரவு
சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு சட்டமன்ற தலைவர் நாகை மாலி பேசும் போது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இது. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமை ஏற்றுள்ளார். ஜனாதிபதி தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. மதவெறி சக்திகளுக்கும் மதசார்பற்ற சக்திகளுக்கும் நடைபெறும் தேர்தல் என்று கூறினார். வெற்றி வேட்பாளருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பேராதரவை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறினார்.

முக்கியமான தேர்தல்
சிபிஐ சட்டமன்ற கட்சித்தலைவர் ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆகியோர் வாழ்த்தி பேசியதோடு ஆதரவையும் தெரிவித்தனர். இது தேர்தல் என்பதையும் கடந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்கான உங்களுடைய பங்களிப்பு தொடர்ந்து இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். இந்த மேடையில் தலைவர்கள் அமர்ந்திருப்பது கருணாநிதியின் இதயம் போல இருப்பதாகவும் அவரும் உங்களை தமிழகத்தின் சார்பில் வாழ்த்துவார் என்றும் கூறினார் விசிக எம்எல்ஏ. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா ஆகியோரும் வாழ்த்துக்களை கூறி ஆதரவினை தெரிவித்தார். குடியரசுத்தலைவர் தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் என்றும் ஜவாஹிருல்லா குறிப்பிட்டார்.
-
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
"தூண்" ஸ்டாலின் இல்லாத இந்தியா கூட்டணி பலமா? அக்ரசிவ் அரசியலுக்கு மாறும் திமுக.. முழுசா மாறிய காங். -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து களம் காணும் திமுக? ஸ்டாலின் கைக்கு வரும் கள ஆய்வு குழு அறிக்கை -
3 மாதத்தில் ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் எப்போ சொன்னார்? திரித்து பரப்புவதா? தங்கம் தென்னரசு டென்ஷன் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications