தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடத்த ஆட்சேபணை இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றுஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம் எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த பத்து மாத காலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுவரை தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு, இடைப்பருவத் தேர்வுகள் நடத்தப்பட்டு விட்டன.

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் வழக்கமாக அரையாண்டு தேர்வுகள் நடைபெறும். இன்னும் பள்ளிகள் எப்போது திறப்பது என்றே முடிவு செய்யப்படாத நிலையில் அரையாண்டு தேர்வு நடத்துவது பற்றி அரசுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் யோசிக்கவே இல்லை.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளைப் பொறுத்தவரை அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார். தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம். எந்தவித ஆட்சேபமும் இல்லை என்றும் தெரிவித்தார் செங்கோட்டையன்.
தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே பள்ளிக் கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
நடப்பாண்டில் மாணவர்கள் நலன் கருதி 50 சதவிகித பாடக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இவை தவிர நடத்தப்படும் பாடங்களில் இருந்து மட்டும் தான் தேர்விற்கு வினாக்கள் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications