ஆடுதுறை பேரூராட்சி தலைவர் தேர்தலை நிறுத்தியது ஏன்? தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்ட ஹைகோர்ட்
சென்னை: தஞ்சை மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலை விரைந்து நடத்தக் கோரிய வழக்கில் மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கமளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் 15 வார்டுகளை கொண்ட ஆடுதுறை பேரூராட்சியில் 4 இடங்களில் திமுகவும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 2 இடங்களிலும், மதிமுக ஒரு இடத்திலும் வெற்றிபெற்றது. அதேபோல் பாமக 4 இடங்களிலும் அதிமுக 2 இடங்களிலும் சுயேட்சைகள் 2 இடங்களிலும் வெற்றிகண்டனர்.

தலைவர் போட்டியில் மதிமுக, பாமக
இதில் பேரூராட்சித் தலைவர் வேட்பாளராக மதிமுக சார்பில் வெற்றிபெற்ற ரா.சரவணனை திமுக தலைமை நிறுத்தியுள்ளது. அதேநேரம் பா.ம.க. சார்பில் வெற்றிபெற்ற வன்னியர் சங்க மாநிலத் தலைவர் ம.க.ஸ்டாலினும் பேரூராட்சித் தலைவர் போட்டியில் இறங்கியுள்ளார். இதில் பேரூராட்சித் தலைவராக 8 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுவதால் குதிரை பேரம் நடைபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்கூறி வெற்றிபெற்ற வார்டு உறுப்பினர்கள் வீடு முன் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கவுன்சிலர்கள் ரகளை
ஆடுதுறை பேரூராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் மார்ச் 4ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், வார்டு உறுப்பினர்களிடையே மோதல் வெடித்ததால் மறைமுக தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்த நிலையில், மறைமுக தேர்தலை நடத்தக் கோரி பாமகவை சேர்ந்த ம.க.ஸ்டாலின் உட்பட 8 வார்டு உறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், 15 உறுப்பினர்களில் 8 பேரின் ஆதரவு தனக்கு இருப்பதாகவும், மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 ஆம் தேதி திமுக உறுப்பினர்கள் 3 பேர் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள், தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை கிழித்து ரகளையில் ஈடுபட்டதாகவும் குறிப்பிட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மறைமுக தேர்தலை நடத்த கோரிக்கை
குதிரை பேரம் மற்றும் கட்சி தாவல் சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் உரிய போலீஸ் பாதுகாப்புடன், உடனடியாக ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறும் அவர்கள் மனுவில் கோரியுள்ளனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பரத சக்கரவர்த்தி அமர்வு மாநில தேர்தல் ஆணையம் இதுகுறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளை ஒத்தி வைத்தது.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications